search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய மின் இணைப்பு வழங்க தாமதம் - விவசாயிகள் புகார்
    X

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்த காட்சி.

    விவசாய மின் இணைப்பு வழங்க தாமதம் - விவசாயிகள் புகார்

    • மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் மின் கோட்ட நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் செயற் பொறியாளர் (பொது) திருஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.கிருஷ்ணாபுரம் வே.மந்தராசலம் கொடுத்த மனுவில், சாலைப்புதூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதியில் உள்ள வலசுபாளையம் நாச்சிமுத்து,வேலுசாமி ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு இலவச விவசாய மின்சார இணைப்பு ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று கடந்த 22ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை . அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.விரைவில் விவசாய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×