search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duraimurugan"

    தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.
    தேனி:

    கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    முல்லைப் பெரியாறு அணை

    இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். முல்லைப் பெரியாறு அணை தமிழக கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வுசெய்கிறார்.
    சென்னை:

    கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வரும் 9-ம் தேதி அந்த 5 மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    அமைச்சர் துரை முருகன்

    ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்துத் தவறான செய்தி தெரிவித்திருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.தியாகராஜன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
    22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.

    மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம்.

    கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம். புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்கான திட்ட அறிக்கையை காட்டுங்க, எப்ப நிதி ஒதுக்கீடு செய்தீங்க? பொய் சொல்லி மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்ட சபையில் எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


    இந்த இடைத்தேர்தலோடு அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார்.

    ஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் வங்கி வாசலில் மக்களை நிறுத்தியதால் அவரது ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட உள்ளனர்.

    ஸ்டாலின் முதல்வரானால் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்படுவதுடன் 5 பவுனுக்கு கீழான நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

    துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.

    இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்று துரைமுருகன் பேசியுள்ளார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    கோவை:

    சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிகரான கட்சி இந்தியாவில் எங்கும் இல்லை. எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஆட்டி பார்க்க முடியவில்லை. பண பலம், போலீஸ் பலம் என அனைத்தும் வைத்துள்ள அ.தி.மு.க.வினர் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்ததா?.

    மத்திய, மாநில ஆட்சிகளை ஒரே நேரத்தில் தூக்கி எறியும் சக்தியை கலைஞர் பெற்றிருந்தார். இப்போது தலைவர் இல்லாத நேரத்தில் யார் பிரதமர் என்பதை சொல்லும் சக்தியை தளபதி பிடித்துள்ளார். தளபதியின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக பார்க்கிறேன். கண்ணை மூடினால் கலைஞராக தோன்றுகிறார்.

    கலைஞரிடத்தில் கற்ற வரம் தமிழகத்தில் தளபதிக்கு கிடைத்துள்ளது. தளபதி 50 ஆண்டுகள் ஆட்சி புரிவார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்.பி. தொகுதிகள் தளபதியின் கையில் வந்து விடும். ஒன்று அல்லது இரண்டில் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் ஆட்சி கிடைக்கும் என்பதால் தான் மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்களை களை எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சூலூரில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என கோடிகளை இறக்கி உள்ளனர். கோவை மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 100 சதவீதம் வெற்றி பெறுகிறோம். சூலூரையும் ஜெயித்து காட்டுங்கள். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறினார் எடப்பாடி. உலகத்தில் மோடியை போல் வெறுப்பை பெற்ற பிரதமர் யாருமே கிடையாது. மீண்டும் பிரதமராக வர மோடிக்கு வாய்ப்பே இல்லை. 

    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராக அமர்வார். 

    இவ்வாறு அவர் பேசினார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.  

    வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.



    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி இருந்தது. கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்பிதல் அளித்தார்.

    இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    வேலூரில் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக, தங்கள் மீது வீண்பழி சுமத்த முயற்சி நடப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    சென்னை :

    திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

    மேலும், திமுக பிரமுகரான சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடைபெற்ற சோதனையில், சிமெண்ட் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கப் பணம் மூட்டை மூட்டையாக சிக்கியது.

    இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அ.திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.திமுக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதும் உண்டு. அது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்துக்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது.

    இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரித்துறையின் சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள்.

    இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடப்போவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீடு - கல்லூரி சோதனைகளில் சட்டத்துக்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு, இவர்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதாக, அவைகளைக் காட்டி, எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.

    இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

    ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அதை தடுத்தால் தோல்வி பயம் என்பதா? என்று பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #ponradhakrishnan #duraimurugan

    நாகர்கோவில்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அவற்றை வினியோகமும் செய்வார்கள். அதை தடுத்தால் தேர்தலில் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் கமி‌ஷனின் கடமை. பணப்பட்டுவாடா பல இடங்களிலும் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் கொடுக்கும் செயல்கள் நடைபெறுகிறது. இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    குமரி மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு உள்ளதை பெரிய பணி இல்லை என்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நாங்குநேரி தொகுதியில் எத்தனை சாலைகள் போட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 150 சாலைகள் போட்டுள்ளோம். இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளது. மக்கள் பிரதி நிதிக்கு இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது.

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பாராளுமன்ற தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறியது என்ன ஆனது என்று கேட்கிறார்கள். குமரி மாவட்ட மக்கள் தொகை 20 லட்சம். இவர்களுக்கும் நாடு முழுவதும் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை சுய வேலை வாய்ப்பு மூலம் தொழில் அதிபர்களாக ஆக்க நினைக்கிறோம். துறைமுகம் மூலம் பல ஆயிரம் பேருக்கு அந்த திட்டத்தின் பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #duraimurugan

    துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    கொல்கத்தா:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

    இதனுடன் அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரிதுறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, சி.பிஎஸ்.இ பள்ளியில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்கம், டெல்லி,  உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது.

    அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். #Duraimurugan #DMK #Raid
    வேலூர் :

    வேலூர் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்தனர். வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். அதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.  வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு  சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து  துரைமுருகன் கூறியதாவது:



    திடீரென நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றனர். விவரங்களை கேட்டோம். பிறகு தவறாக வந்து விட்டோம் என கூறினர். சிறிது நேரம் கழித்து யாருடனோ செல்போனில் பேசி விட்டு மீண்டும் வந்தனர், நாங்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறினர். யார், என்ன என்பது குறித்து தெரியாமல் உள்ளே விட மறுத்தோம். பின்னர் உள்ளே வந்து சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்று செயல்களில் அரசு ஈடுபடுவது முறையானதல்ல.

    நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரண கல்லூரி தான் வைத்துள்ளோம். ஆனால் வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது.  இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #Raid
    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். #Duraimurugan #DMK #Raid
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது.

    சென்னையில் அவருக்கு கோட்டூர்புரத்தில் வீடு இருக்கிறது.

    சென்னையில் அரசியல் பணிகள் இல்லாத நாட்களில் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    கதிர்ஆனந்துக்கு ஆதரவாக துரைமுருகன் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காந்திநகரில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையே வேலூர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும், பறக்கும் படையினரும் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    இரவு 11.30 மணியளவில் மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை.

    அவர் வருவதற்குள், அதிகாரிகள் உள்ளே சென்று அறையில் அமர்ந்தனர். வருமானவரி சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து துரைமுருகன் காந்திநகரில் உள்ள வீட்டுக்கு விரைந்து வந்தார். அவரிடம் வீட்டுக்குள் இருந்த அதிகாரிகள், “நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைக்கேட்ட துரைமுருகன் உடனடியாக தன்னுடைய வக்கீல்களை வரவழைத்தார். அவர்கள் அதிகாரிகளிடம் இருந்த அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர். அதில், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் எப்படி வீட்டுக்குள் சோதனையிட முடியும் என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து வக்கீல்களுக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



    சிறிது நேரத்தில், வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்தார். என்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று வக்கீல்களிடம் கூறினார்.

    ஆனாலும், வீடுகளில் சோதனை செய்யலாம் என்று அதில் குறிப்பிடப் படவில்லையே என்று தெரிவித்த வக்கீல்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீடித்தது.

    இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கும் தகவல் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது. ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    துரைமுருகன் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் சோதனை நடத்தாமல் செல்லமாட்டோம் என்று வருமானவரித்துறையும், பறக்கும் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு 4 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.

    காலை 5.45 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் 3 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் வீட்டிற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    துரைமுருகன் வீட்டில் உள்ள அறைகள், மாடியில் உள்ள அறைகள், தண்ணீர் தொட்டி, துரைமுருகனுக்கு சொந்தமான கார்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் இருந்த சில ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு துரைமுருகன் பதில் அளித்தார். இதுபற்றிய முழுமையான விவரங்களை வருமானவரித்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    காலை 8.30 மணிக்கு சோதனையில் ஒரு பகுதி முடிந்தது. சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேரில் 3 பேர் வெளியே வந்தனர். அவர்கள் துரைமுருகன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை காரில் எடுத்து சென்றனர். 4 அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.



    காலை 9 மணியளவில் அவர்களும் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். சுமார் 6 மணி நேரம் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு கருதி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. வாக்காளர்களுக்கான பணப்பட்டு வாடா புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அங்கும் சோதனை நடத்தினார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு 7 பேர் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சோதனை நீடித்து வருகிறது.

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து சோதனையை உடனடியாக மேற்கொண்டனர். நள்ளிரவு 1 மணி வரை நடத்திய சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொதியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    காலை 10 மணியளவில் பிரசாரம் தொடங்கும் அவர் மாலை 5 மணியளவில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற் கொள்கிறார். இரவு வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்.

    தொடர்ந்து 1-ந் தேதி அரக்கோணம் மக்களவை தொகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Duraimurugan #DMK #Raid
    காட்பாடிக்கு சிறப்பு மருத்துவ மனை கொண்டுவருவதே என் லட்சியம் என்று லாலாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். #duraimurugan #dmk #mkstalin

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோகுலன், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் துரைமுருகன் தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:- 

    நான் காட்பாடி சட்டமன்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் இறப்பதற்குள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பு மருத்துவமனை கொண்டுவர வேண்டும்.

    தமிழகத்தில் சேலத்தில் இதுபோன்ற மருத்துவமனை உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது காட்பாடி தொகுதிக்கு நான் தனியாருக்கு நிகரான நவீன மருத்துவமனையை கொண்டு வருவேன். மருத்துவமனையை கட்டி முடிப்பேன் இதுவே என் லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார், ஈஸ்வரப்பன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கிங்ஸ்டன் கல்வி குழும நிறுவனர் கதிர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கழக புரவலர் துரைசிங்காரம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, உள்பட மாவட்ட ஒன்றிய நகர உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி கருணாநிதி நன்றி கூறினார்.  #duraimurugan #dmk #mkstalin

    ×