search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kathir Anand"

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
    • பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

    வேலூர் :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.

    அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.

    அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

    • வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.

    ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...

    • 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
    • வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.

    அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

    கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

    அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.

    இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.

    • தி.மு.க. பொதுச் செயலாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.
    • இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

    இதற்கிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் எம்.பி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்துசெய்ய முடியாது என அதிரடியாக தெரிவித்த சென்னை ஐகோர்ட், கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    வேலூர்:

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை ஆதரித்து பிரசாரம் செய்தார். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.


    எங்கள் வெற்றி வாய்ப்பை தடுக்க பா.ஜ.க, அ.தி.மு.க வருமான வரித்துறையை பயன்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சட்டத்திற்கு புறம்பாக எங்களது வீடு, கல்லூரிகளில் சோதனை நடத்தினர்.

    வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.

    தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.  

    வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.



    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி இருந்தது. கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்பிதல் அளித்தார்.

    இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    பெட்டிப் பெட்டியாக பணம் பறிமுதல் மற்றும் ஆரத்திக்கு பணம் தந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #Kanimozhi #KathirAnand
    சென்னை:

    ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
     
    தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே, அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு இம்மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டது. #MadrasHC #MadrasHCdismissed #baningcandidature #Kanimozhi #KathirAnand #LSpolls
    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #EC #VelloreConstituency
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.

    மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.

    முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.

    அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

    இந்த விவகாரத்தில் நேற்று மதியம் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency

    தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. #kanimozhi
    மதுரை:

    ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.



    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #kanimozhi
    வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

    தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

    வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

    தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.


    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
    வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர்ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    ×