search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த முறையும் வெற்றி பெறுவாரா கதிர் ஆனந்த்?
    X

    இந்த முறையும் வெற்றி பெறுவாரா கதிர் ஆனந்த்?

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
    • பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

    வேலூர் :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.

    அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.

    அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

    Next Story
    ×