search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duraimurugan"

    • சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
    • உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் பேச முயன்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் செல்வ பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார். ஆனாலும் செல்வபெருந்தகை மீண்டும் சில வார்த்தைகள் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இவருக்கு இதே வாடிக்கையாகி போய்விட்டது. எங்களை குற்றம் சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா என்று ஆவேசத்துடன் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் சபை அமைதியானது.

    • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    • நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்தில் இருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடி மதிப்பீட்டில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது, இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடி மதிப்பீட்டிலான 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

    மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடு வாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசத்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தணிப்பு பணிகளை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த மாநாடு நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    துபாய் :

    துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

    இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார்.

    இதுகுறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் கூறுகையில், 'துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும். 3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்' என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது.
    • நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள்.

    சென்னை :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    கருணாநிதி எப்படி இந்த இயக்கத்தை நடத்தினாரோ, அப்படியே இந்த இயக்கத்தை நடத்தக்கூடிய ஆற்றலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அவர், ஆட்சியிலும், கட்சியிலும் ஆற்றுகிற பணி எல்லோரையும் வியக்க வைக்கிறது.இந்தியாவில் இப்படிபட்ட ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். இதோடு அவருக்கு பணி தீரவில்லை. இன்றைக்கு அவரை நாடு எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரை அகில இந்தியா நோக்குகிறது.

    அன்றைக்கு உங்கள் (மு.க.ஸ்டாலின்) தந்தை (கருணாநிதி) இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றினார். இன்றைக்கு நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். உங்களால்தான் முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

    நீங்கள் கருணாநிதியின் மகன். உங்களுக்கு அந்த வல்லமை, திராணி, தைரியம் உண்டு என்று நாடு கருதுகிறது. நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வந்து இருக்கிறது. இதற்கு அடையாளமாக தான் பல திசைகளில் இருந்து தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்திய நாடு ஒரு நாள் இந்த கோபாலபுரம் இல்லத்துக்கு நுழைந்து உங்களை பார்த்து நீங்கள்தான் நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் (பிரதமர் பதவி) என்று சொல்லும் காலம் வரும்... வரும்... வரும்...

    இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

    • துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
    • துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள்" நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    அதன்படி தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி-விவசாயி அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் பொன்முடி-பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக செயல்படுவார்.

    துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி-சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
    • நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.

    மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.

    ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.

    அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அழிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் அமையக் கூடாது.
    • அரசியல் சட்டத்தின் அடிப்படையான கோட்பாட்டிற்கு இந்த தீர்ப்பு எதிரானது.

    திமுக பொதுச் செயலாளரும்,அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களே "செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்  நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

    திமுகவை பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் கேசவானந்த பாரதி, இந்திரா சாஹ்னி (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

    அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள்.

    அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள், ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது.

    அதனால்தான் இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட்,  தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

    நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டு விட்டே தனது தீர்ப்பை அவர் எழுதியுள்ளார். இறுதியில் இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

    ஆகவே நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலை நாட்டிட, சமூகநீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
    • அவரது கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    சென்னை :

    தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளராக இருந்து வந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில், ''காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்து, தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்.'' என்று கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக சென்று மொரார்ஜி தேசாயை சந்தித்திருக்கிறார் கலைஞர்
    • என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது? என மொரார்ஜி தேசாய் கேட்டுள்ளார்

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

    அண்ணா மாநிலங்களவைக்கு சென்றபிறகுதான் அவர் அறிவாற்றலை கண்டு அனைவரும் வியந்தனர். அதேபோல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக முதன் முதலாக டெல்லி சென்றபோது மிக சாதாரணமாக நினைத்தார்கள். மொரார்ஜி தேசாயை பார்க்க போனார். அவரை 5 மணிக்கு சந்திக்க அவகாசம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். அப்போது கலைஞருக்கு வாழ்த்துகூட சொல்லாமல் மொரார்ஜி தேசாய், 'உங்கள் வீட்டு வேலைக்காரனா நான், உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பதற்கு?' என்று எடுத்தவுடனே நெருப்பை கொட்டியிருக்கிறார்.

    அப்போது கலைஞர் கூறுகையில், 'அந்த நாற்காலியில் அமர்வதற்கு கூட எனக்கு மனமில்லை. இருந்தாலும் நெருப்பின் மீது உட்காருவதுபோல் அந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன்' என்று கூறியிருக்கிறார்.

    அடுத்து 'எங்கே வந்தீர்கள்? என்று மொரார்ஜி தேசாய் கேட்டிருக்கிறார். நிதி கேட்பதற்கு, என கலைஞர் கூறியிருக்கிறார். அப்போது மொரார்ஜி தேசாய், நிதி எங்கே கொட்டிக்கிடக்கிறது? என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது, உனக்கு அறுத்து கொடுப்பதற்கு? என மீண்டும் சாடியிருக்கிறார்.

    அதுவரை பொறுமை காத்த கலைஞர் சொன்னாராம், பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது, பிறகு உங்கள் தோட்டத்தில் எப்படியய்யா இருக்கும்? என்று கேட்டபொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

    பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கருணாநிதியால்தான் முடியும் என்று இந்தியாவே ஒப்புக்கொண்டு போனது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்வதாக துரைமுருகன் பேச்சு
    • திராவிட ஆட்சியின் தத்துவத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது.

    தளபதி அவர்கள், கட்சி தலைவராகி முதலமைச்சர் ஆனவுடன், இன்றும் அதிகமாக அவரது கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி என்று அகில இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது.

    நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவர்கள், தளபதியை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்தால் என் வீட்டில் தங்கு. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.

    யாராலும் இந்த ஆட்சியை பற்றி குறை கூற முடியவில்லை. மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்கின்றன. நமது முதலமைச்சர் அவர்கள் ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

    இனிமேல் இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறியிருக்கிறார். இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். எனவே, இன்னும் 60 ஆண்டு காலத்துக்கு இந்த இயக்கத்துக்கு பயமில்லை, ஆட்சிக்கும் பயமில்லை என்ற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார். 

    இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

    • ஜம்மு காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று மதுரை வந்தடைந்தது.
    • அவரது உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    75-வது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

    ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம். ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த ராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் "நாட்டுப்பற்று" சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.

    செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

    ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள், தூண்டி விட்டவர்கள், துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    நானோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×