search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடையாறு ஆற்றின் முகத்துவாரம் விரைவில் தூர் வாரப்படும்- சட்டசபையில் துரைமுருகன் தகவல்
    X

    அடையாறு ஆற்றின் முகத்துவாரம் விரைவில் தூர் வாரப்படும்- சட்டசபையில் துரைமுருகன் தகவல்

    • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    • நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்தில் இருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடி மதிப்பீட்டில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது, இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடி மதிப்பீட்டிலான 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

    மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடு வாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசத்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தணிப்பு பணிகளை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×