என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. மகளிர் அணிக்கு கனிமொழி எம்.பி. பொறுப்பாளர்- துரைமுருகன் அறிவிப்பு
- துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
- துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள்" நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அதன்படி தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி-விவசாயி அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
துணை பொதுச்செயலாளர் பொன்முடி-பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக செயல்படுவார்.
துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி-சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்