என் மலர்
நீங்கள் தேடியது "special medical center"
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோகுலன், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் துரைமுருகன் தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-
நான் காட்பாடி சட்டமன்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் இறப்பதற்குள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பு மருத்துவமனை கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் சேலத்தில் இதுபோன்ற மருத்துவமனை உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது காட்பாடி தொகுதிக்கு நான் தனியாருக்கு நிகரான நவீன மருத்துவமனையை கொண்டு வருவேன். மருத்துவமனையை கட்டி முடிப்பேன் இதுவே என் லட்சியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார், ஈஸ்வரப்பன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கிங்ஸ்டன் கல்வி குழும நிறுவனர் கதிர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கழக புரவலர் துரைசிங்காரம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, உள்பட மாவட்ட ஒன்றிய நகர உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி கருணாநிதி நன்றி கூறினார். #duraimurugan #dmk #mkstalin






