என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver killed"
- ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
- மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலாம்பூர்,
கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த இளம்வழுதி (52) என்பவருடன் கேரளா நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
ஆட்டோ எல்.அண்ட்.டி. பைபாஸ் ரோட்டில் குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இளம்வழுதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்தும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகிறார்கள்.
காரமடை தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தை சேர்ந்தவர் மிதுன் (20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சந்துரு, நிதின்குமார் ஆகிய மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டி சென்றார்.
மோட்டார் சைக்கிள் கணுவாய்பாளையம் - பத்திரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது திடீரென மோடடார் மீது மான் மோதியது. மான் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, நிதின்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.
- இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.
புதுவை தர்மாபுரி லெனின் வீதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அய்யனாருக்கு திருமணத்துக்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அய்யனார் போதை பொருளான ஹான்ஸ் போடும் பழக்கமும் ஏற்படுத்தி கொண்டார்.
இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு 2 முறை இருதய அறுவை சிகிச்சையும், நடந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அய்யனாரை மது அருந்த வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் அய்யனார் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
மேலும் மது குடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அய்யனார் இதுபோல் மது குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி யமுனா கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சண்முகாபுரத்தில் உள்ள அய்யனாரின் பாட்டி வீட்டில் தங்கியிருந்து வந்தார். மனைவி கோபித்து சென்றது முதல் அய்யனார் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கணவன்-மனைவியை சமாதானம் செய்து வைக்க திருக்கோவிலூரில் வசிக்கும் யமுனாவின் சகோதரி கல்பனா மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் யமுனா தங்கியிருந்த சண்முகாபுரத்துக்கு வந்தனர். இதையடுத்து அய்யனாரிடம் சரவணன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அய்யனார் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து சரவணன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகிய இருவரும் அய்யனார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அய்யனார் அருகில் உள்ள அவரது நண்பர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பதாக தகவல் வந்தது.
உடனே அய்யனாரை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் அய்யனார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அய்யனார் இறந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது மனைவி யமுனா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஜய் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
- நேற்று இரவு விஜய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் விஜய் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு விஜய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆயிபாளையம் ரெயில்வே பாதையை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு வெண்ணந்தூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
- செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்,சாலையை கடக்கும் பொழுதுமோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது..
- இதில் செல்வதடசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கக்கனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். விக்கிரவாண்டி அருகே உள்ள இரவு ஓட்டலில் பஸ் நின்றபோது பஸ்சை தவற விட்டுவிட்டார்,
பின்னர் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் பஸ்சில் ஏறுவதற்காக சாலையை கடக்கும் பொழுது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றினர். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
- ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
மொடக்குறிச்சி
கோவை பெரிய பஜார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரேம் குமார் (32). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவரது உறவினர்கள் மொடக்குறிச்சி அருகே முத்து கவுண்டன் பாளையம் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.
அவர்களை அழைத்து வருவதற்காக பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
தொடர்ந்து அவர் முத்து கவுண்டம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வேனில் வந்தார்.
அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது அந்த வழியாக பின்னால் வந்த ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காரில் வந்த கார் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரனின் சகோதரி வளர்மதி ஆகிய 2 பேரும் படுகாயம் அடை ந்தனர்.
அவர்கள் ஈரோடு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மொட க்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடிவேரி பிரிவு பகுதியில் 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
- இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
கோபி:
ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் பகுதி யில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சங்கை (40) என்பவர் வேனில் பால் கேன்களை ஏற்றி கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை சங்கை ஓட்டி சென்றார்.
அவர் கோபிசெட்டிபாளையம் ரோட்டில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு வேன் வந்தது.
கொடிவேரி பிரிவு பகுதியில் வந்த போது அந்த 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மற்றொரு வேனில் வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
- இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
- கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
- முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று கங்கனா கவுடா பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார்.
- அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பவானி:
கர்நாடக மாநிலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கங்கனா கவுடா (32). போர்வெல் லாரி டிரைவர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பூஜாப்பூர் ஆனந்தராப்ட் என்பவர் கங்கனா கவுடாக்கு போன் செய்து திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பட்டறையில் தனது லாரி தயாராகி கொண்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து லாரியை எடுத்து வர கங்கனா கவுடா திருச்செங்கோடு வந்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்கா சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கங்கனா கவுடா பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரின் மனைவி கங்கம்மா பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வெவ்வேறு விபத்துகளில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 39). இவர் சாத்தூர் டோல்கேட் ஆம்புலன்சு டிரைவராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் மகேஸ்வரன் வேலைக்கு புறப்பட்டார். ஆர்.ஆர். நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேம்பாளியை சேர்ந்தவர் ஆண்டி என்ற கல்லாபெட்டி (47). இவர் சம்பவத்தன்று டிராக்டரில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு புறப்பட்டார். டிராக்டரை வேம்பாளியைச் சேர்ந்த முத்தையா என்பவர் ஓட்டினார். நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் உள்ள புல்வாய்க்கரை காலனி பகுதியில் வந்தபோது டிராக்டரில் அமர்ந்திருந்த ஆண்டி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை (71). இவர் சம்பவத்தன்று நாகராஜன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தார். ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது சேர்மதுரை இறங்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.
- தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலூர்
சென்னையில் இருந்து சிவகாசி நோக்கி பி.வி.சி. பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இதை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைராபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 36) ஓட்டி வந்தார்.
இந்த லாரி மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டி என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்த போது திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை விட்டு விலகி ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதியது. அப்போது டிரைவர் சக்திவேல் கதவைத் திறந்து வெளியே குதித்தார். இதில் எதிர்பாராதமாக அவரது சட்டை, லாரியில் இருந்த கம்பியில் மாட்டியதால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சக்திவேலின் தலையில் லாரி டயர் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
- பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,
கடலூர்:
வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.
இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்