search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலி
    X

    ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலி

    • வெவ்வேறு விபத்துகளில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 39). இவர் சாத்தூர் டோல்கேட் ஆம்புலன்சு டிரைவராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் மகேஸ்வரன் வேலைக்கு புறப்பட்டார். ஆர்.ஆர். நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேம்பாளியை சேர்ந்தவர் ஆண்டி என்ற கல்லாபெட்டி (47). இவர் சம்பவத்தன்று டிராக்டரில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு புறப்பட்டார். டிராக்டரை வேம்பாளியைச் சேர்ந்த முத்தையா என்பவர் ஓட்டினார். நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் உள்ள புல்வாய்க்கரை காலனி பகுதியில் வந்தபோது டிராக்டரில் அமர்ந்திருந்த ஆண்டி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை (71). இவர் சம்பவத்தன்று நாகராஜன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தார். ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது சேர்மதுரை இறங்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×