search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேருக்கு நேர் மோதி"

    • மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
    • 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (19). கூலி தொழிலாளியான இவர் பர்கூரில் இருந்து அந்தியூரக்கு வந்தார்.

    இதையடுத்து அவர் மீண்டும் சொந்த ஊரான ஊசிமலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாமரைக்கரை என்ற இடத்தில் ஊசிமலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் (52) என்ப வர் சித்தலிங்கம் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அவர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

    தொடர்ந்து அவர்கள் இருவரும் பர்கூர் அருகே ஆலமரத்து வளைவு என்ற இடத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு மினி லாரி வந்தது. அப்போது எதிர்பா ராத விதமாக மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

    இதில் இரு சக்கர வாக னத்தில் வந்த சித்தலிங்கம் மற்றும் சின்னப்பையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சித்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலை யில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சின்ன பையனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கி ருந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் ஊராட்சி கோட்டை கே. என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகன் ஹரி கேஸ்வரன் (22). விமான பணிக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதற்காக பவானியில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    தொடர்ந்து அவர் நம்பியூர் அருகே உள்ள பூச்ச நாயக்கன்பாளையம் பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக எதிரில் ஒரு டிப்பர் லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் கார் நொறுங்கி இருபாடுகளில் சிக்கி ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹரிகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொடிவேரி பிரிவு பகுதியில் 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் பகுதி யில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சங்கை (40) என்பவர் வேனில் பால் கேன்களை ஏற்றி கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை சங்கை ஓட்டி சென்றார்.

    அவர் கோபிசெட்டிபாளையம் ரோட்டில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு வேன் வந்தது.

    கொடிவேரி பிரிவு பகுதியில் வந்த போது அந்த 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மற்றொரு வேனில் வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பவானி, டிச. 2-

    ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×