search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மது குடித்த டிரைவர் பலி
    X

    கோப்பு படம்.

    மது குடித்த டிரைவர் பலி

    • குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.
    • இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.

    புதுவை தர்மாபுரி லெனின் வீதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அய்யனாருக்கு திருமணத்துக்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அய்யனார் போதை பொருளான ஹான்ஸ் போடும் பழக்கமும் ஏற்படுத்தி கொண்டார்.

    இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு 2 முறை இருதய அறுவை சிகிச்சையும், நடந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அய்யனாரை மது அருந்த வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் அய்யனார் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    மேலும் மது குடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அய்யனார் இதுபோல் மது குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி யமுனா கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சண்முகாபுரத்தில் உள்ள அய்யனாரின் பாட்டி வீட்டில் தங்கியிருந்து வந்தார். மனைவி கோபித்து சென்றது முதல் அய்யனார் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கணவன்-மனைவியை சமாதானம் செய்து வைக்க திருக்கோவிலூரில் வசிக்கும் யமுனாவின் சகோதரி கல்பனா மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் யமுனா தங்கியிருந்த சண்முகாபுரத்துக்கு வந்தனர். இதையடுத்து அய்யனாரிடம் சரவணன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அய்யனார் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சரவணன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகிய இருவரும் அய்யனார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அய்யனார் அருகில் உள்ள அவரது நண்பர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பதாக தகவல் வந்தது.

    உடனே அய்யனாரை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் அய்யனார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அய்யனார் இறந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி யமுனா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×