search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மீது கார் மோதி டிரைவர் பலி
    X

    வேன் மீது கார் மோதி டிரைவர் பலி

    • பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
    • ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    மொடக்குறிச்சி

    கோவை பெரிய பஜார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரேம் குமார் (32). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவரது உறவினர்கள் மொடக்குறிச்சி அருகே முத்து கவுண்டன் பாளையம் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.

    அவர்களை அழைத்து வருவதற்காக பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.

    தொடர்ந்து அவர் முத்து கவுண்டம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வேனில் வந்தார்.

    அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது அந்த வழியாக பின்னால் வந்த ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் காரில் வந்த கார் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரனின் சகோதரி வளர்மதி ஆகிய 2 பேரும் படுகாயம் அடை ந்தனர்.

    அவர்கள் ஈரோடு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×