search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after falling on"

    • சம்பவத்தன்று கங்கனா கவுடா பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார்.
    • அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    பவானி:

    கர்நாடக மாநிலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கங்கனா கவுடா (32). போர்வெல் லாரி டிரைவர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பூஜாப்பூர் ஆனந்தராப்ட் என்பவர் கங்கனா கவுடாக்கு போன் செய்து திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பட்டறையில் தனது லாரி தயாராகி கொண்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து லாரியை எடுத்து வர கங்கனா கவுடா திருச்செங்கோடு வந்தார்.

    இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்கா சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கங்கனா கவுடா பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக அவரின் மனைவி கங்கம்மா பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×