search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலி
    X

    டயரில் சிக்கி பலியான டிரைவர் சக்திவேல்.

    விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலி

    • மேலூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.
    • தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    மேலூர்

    சென்னையில் இருந்து சிவகாசி நோக்கி பி.வி.சி. பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இதை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைராபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 36) ஓட்டி வந்தார்.

    இந்த லாரி மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டி என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்த போது திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை விட்டு விலகி ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதியது. அப்போது டிரைவர் சக்திவேல் கதவைத் திறந்து வெளியே குதித்தார். இதில் எதிர்பாராதமாக அவரது சட்டை, லாரியில் இருந்த கம்பியில் மாட்டியதால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சக்திவேலின் தலையில் லாரி டயர் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×