search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorce"

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்ட கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.

    ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    • மனைவி விவாகரத்து கேட்டதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், வெங்கடாசலப்புரத்தை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர் (வயது 32). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் விஸ்வேஸ்வர்- ராஜலட்சுமி இடையே கடந்த 2 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வேதனை அடைந்த ராஜலட்சுமி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தார்.

    இது விஸ்வேசருக்கு தெரியவந்தது. இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துவிட்டார். அவர் மயங்கிய நிலையில் தேனூர் பாலம் அருகில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மெக்சிகோவில் ஒரு நபர், விவாகரத்தான தன் மனைவி மீது சந்தேகமடைந்து அவரை வேவு பார்க்கப்போய் வசமாக மாட்டிக்கொண்டார். #MexicoMan
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் போர்டோ பெனஸ்கோ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க திட்டமிட்ட அவர், மனைவியின் வீட்டின் அடியில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளார்.

    அவரது உருவத்திற்கேற்ப துளையிடாததால் வசமாக மாட்டிக்கொண்ட அவர், உள்ளே நுழைய முடியாமலும் வெளியே வரமுடியாமலும் அவதிப்பட்டு உதவிக்கு சப்தமிட்டு அழைத்துள்ளார். தன் வீட்டிற்கு பின்புறம் இருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கவனித்த அந்தப் பெண், பூனையாக இருக்கலாம் என நினைத்துள்ளார்.

    அதன்பின்னர் சத்தம் அதிகமாகவே, அந்தப்பெண் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு தன் வீட்டின் அடியில் சுரங்கப்பாதை தோண்டியிருப்பதும், அதனுள் முன்னாள் கணவர் சிக்கிக்கொண்டிருப்பதையும் அறிந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர். சுமார் 24 மணி நேரம் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #MexicoMan
    பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.
    பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்சனையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

    குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.

    எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான்.

    அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.

    குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.

    உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
    செய்யாறு அருகே மனைவியை மண்எண்ணை ஊற்றி தீவைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது மனைவி நதியாவிடம் உனக்கு இனிமேலும் குழந்தை பிறக்காது. எனவே இந்த வெள்ளை காகிதத்தில் கை எழுத்து போடுமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு நதியா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நதியாவின் மீது ஊற்றி தீவைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நதியாவை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்ைக்காக சென்னை அரசு ஆபத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நதியாவின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

    உலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    நியூயார்க்:

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும்.

    இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் நேற்று டுவிட்டரில் தெரிவித்தனர்.

    “நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள், “தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் கூட்டாளிகளாக சேர்ந்து செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.  #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் சட்டப்பூர்வமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #VishnuVishal #Divorce
    ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இவர், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.



    இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். இப்போது அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “நானும், ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது எங்களின் முக்கிய கடமையாகும். அவனுக்கு நல்லதை செய்வோம். நாங்கள் சில சந்தோஷமான ஆண்டுகளை ஒன்றாக கழித்து இருக்கிறோம். இனிமேலும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவரையொருவர் மதிப்போம். எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலன் கருதி எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VishnuVishal #RajiniNatraj #Divorce

    விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென மாயமாகியுள்ளார். #TejPratapYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப்.

    இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணம் தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளது.

    திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் பாட்னா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்ட சிறையில் உள்ள லாலுபிரசாத் யாதவ் தன்னை பார்க்க உடனடியாக வருமாறு தேஜ்பிரதாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையை பார்க்க சென்றார்.

    தந்தையை பார்த்து விட்டு ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பும்போது தேஜ்பிரதாப் யாதவ் திடீரென மாயமானார். போதிகயாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் மாயமானார். தேஜ்பிரதாப் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. #TejPratapYadav
    லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணம் ஆன 6 மாதத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். #TejPratapYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரிகள் லாலு பிரசாத்-ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும், முன்னாள் முதல்-மந்திரி தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவுக்கும் இந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பாட்னா நகரில் திருமணம் நடந்தது.



    இந்த நிலையில் தேஜ் பிரதாப் நேற்று பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இருவருக்கும் இணக்கமாக செல்வதில் பிரச்சினை உள்ளது. எனவே விவாகரத்து அளிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று கூறப்பட்டு உள்ளது.

    கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்பு ராஞ்சி நகரில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தந்தை லாலு பிரசாத்தை, தேஜ் பிரதாப் சந்தித்து பேசினார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #TejPratapYadav
    கோத்தகிரி அருகே மாடு மேய்த்து கம்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்ட வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தர்மோனா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 32). மாடு வளர்த்து வருகிறார். இவருக்கும் மந்தாடா பகுதியை சேர்ந்த ‌ஷர்மிளா (27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    இந்நிலையில் டேனியல் மாடு வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்பூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்து விட்டேன். எப்படி பொருந்தும் என்று ‌ஷர்மிளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‌ஷர்மிளா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் கடந்த மாதம் தொடங்கியது. இன்று (5-ந்தேதி) மீண்டும் விசாரிக்க இருந்தது.

    இந்நிலையில் மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த டேனியல் நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகுநேரம் ஆன பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டேனியல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×