search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி விவாகரத்து கேட்டதால் தற்கொலை
    X

    மனைவி விவாகரத்து கேட்டதால் தற்கொலை

    • மனைவி விவாகரத்து கேட்டதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், வெங்கடாசலப்புரத்தை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர் (வயது 32). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் விஸ்வேஸ்வர்- ராஜலட்சுமி இடையே கடந்த 2 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வேதனை அடைந்த ராஜலட்சுமி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தார்.

    இது விஸ்வேசருக்கு தெரியவந்தது. இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துவிட்டார். அவர் மயங்கிய நிலையில் தேனூர் பாலம் அருகில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×