search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவன் கைது
    X

    செய்யாறு அருகே மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவன் கைது

    செய்யாறு அருகே மனைவியை மண்எண்ணை ஊற்றி தீவைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது மனைவி நதியாவிடம் உனக்கு இனிமேலும் குழந்தை பிறக்காது. எனவே இந்த வெள்ளை காகிதத்தில் கை எழுத்து போடுமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு நதியா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நதியாவின் மீது ஊற்றி தீவைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நதியாவை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்ைக்காக சென்னை அரசு ஆபத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நதியாவின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

    Next Story
    ×