search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhawan"

    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND
    இங்கிலாந்து -  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
    எசக்ஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சிலும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். #ENGvIND #Dhawan
    இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் செல்ம்ஸ்போர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 395 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்கள்.

    அதேவேளையில் ஷிகர் தவான் டக்அவுட் ஆகியும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

    பின்னர் எசக்ஸ் அணி முதல இன்னிங்சை தொடங்கியது உமேஷ் யாதவ் (4), இசாந்த் ஷர்மா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எசக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆன தவான், இந்த இன்னிங்சில் 3 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    இரண்டு இன்னிங்சிலும் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தவான் ஏமாற்றம் அளித்துள்ளார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
    விராட் கோலி, தவான், டோனியின் ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli #MSDhoni #Dhawan
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும் இந்த போட்டிக்கான ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.



    இதனால் ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. முதல் ஐந்து ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை வில்லே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் சீரான வேகத்தில் ரன்களும் குவித்து வந்தனர். பவர்பிளே ஆன முதல் 10 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    13-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். 17-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரி விரட்டினார். 18-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அவர் 49 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.



    அடுத்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 19.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 24-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார் விராட் கோலி. 25-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கார்த்திக் போல்டானார். இவர் 22 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்கள். ஆனால் 31-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி போல்டானார். அவர் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 30.1 ஓவரில் 156 ரன்கள் சேர்த்திருந்தது.

    அடுத்து வந்த ரெய்னா இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஓரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, அதன்பின் மீள முடியவில்லை. ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் 10 ஓவரில் இந்தியா 32 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் வழக்கமான அதிரடிக்குப் பதிலாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தது.

    இந்தியாவின் 5.4 ஓவரில் 13 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களே எடுத்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.



    இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. இதன்மூலம் கடந்த 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தற்போதுதான் பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்களை சேர்த்துள்ளது.

    இதற்கு முன் தரம்சாலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்தது.
    அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
    தவான், விஜய் சதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.



    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.



    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 64 பந்தில் 50 ரன்னைத் தொடடது. தவான் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 19.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    தொடக்க வீரர் தவான் 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.



    அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.

    இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
    ×