search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ireland vs india"

    அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
    அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி. #IREvIND #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். ஏறக்குறைய இந்த மூன்று வகை வடிவ கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இவர்தான்.

    இந்தியா அயர்லாந்துக்கு எதிராக இன்றும், நாளை மறுநாளும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டியின்போது அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

    இதுவரை விராட் கோலி 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 53 இன்னிங்சில் 1983 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்கள் எடுத்த நான்காவது வீரரும், இந்தியாவின் முதல் வீரரரும் என்ற பெருமையை படைப்பார். அத்துடன் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் படைக்க இருக்கிறார்.



    நியூசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் கப்தில் 2271 ரன்களும், பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 1989 ரன்களும் எடுத்துள்ளனர். மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.
    இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒருமாதம் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போவதாக சாஹல் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அதன்பின் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம்பிடித்தார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அஸ்வின், ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    சாஹல் 23 ஒருநாள் போட்டியில் 43 விக்கெட்டுக்களும், 21 டி20 போட்டியில் 35 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து, இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் சுமார் ஒருமாதம் இடைவெளி உள்ளது. சாஹல் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது.

    இதனால் இந்த ஒருமாதமும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், சாஹல் அவருடைய பயிற்சியாளராக நரேந்த்ர ஹர்மானி உடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கு முன் நாங்கள் அயர்லாந்து சென்று விளையாட இருக்கிறோம். இங்கிலாந்து சிதோஷ்ண நிலைதான் அயர்லாந்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஒருமாதம் இடைவெளி உள்ளது. அப்போது பயிற்சிக்காக தேசிய அகாடமி செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய பயிற்சியாளர் ஹிர்மானியுடன் ஆலோசனை நடத்துவேன்.

    ஹர்மானி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். ஆகவே, இங்கிலாந்து குறித்த சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்து கொள்வேன். இந்தியா ‘ஏ’ அணி முன்னதாக அங்கு செல்கிறது. என்னுடைய ஏராளமான நண்பர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களிடம் இருந்து கேட்டறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்’’ என்றார்.
    ×