search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhuvi"

    வங்காள தேசம் 65 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

    லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நஸ்முல் ஹுசைன் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    தொடக்க விக்கெட்டுக்களை 16 ரன்னுக்குள் இருவரும் வீழ்த்தினார்கள். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கும்போது ஜடேஜா பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கைக்கு எதிராக சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை 21 ரன்னிலும், முமகது மிதுனை 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா வெளியேற்ற வங்காள தேசம் 65 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மொசாடெக் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. வங்காள தேசம் 25 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    புவி மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமான வேகப்பந்து வீச்சு பலம் உள்ளது என முன்னாள் வீரர் டேரன் காக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில்தான் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்டில் இவர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஸ்விங் மன்னனான புவனேஸ்வர் குமார் இல்லது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமாக வேகப்பந்து வீச்சு உள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேரன் காக் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் மிகப்பெரிய இழப்புதான். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஏனென்றால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தியா தற்போதைய நிலையில் ஒரு வீரரை சார்ந்திருக்கவில்லை.

    முன்னதாக, இந்திய அணி அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் அல்லது ஜாகீர்கானை சார்ந்திருந்தது. இந்த நிலை நீண்ட நாட்களாக இல்லை. எந்தவொரு ஆடுகளத்தை கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்வார்கள். இந்த தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.



    இன்றைய நிலையில் சொந்த மைதானத்திலோ அல்லது வெளி நாட்டிலோ விளையாடியால் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென்றால், உங்களுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். புவி ஸ்விங் செய்வார். பும்ரா ஸ்கிட்டிங் சீம் பவுலர், உமேஷ் யாதவ் புதுப்பந்தில் அதிக வேகத்துடன் வீசுவார். முகமது ஷமி ஸ்டிராங்க் மற்றும் ஹிட்ஸ். இசாந்த் ஷர்மா அனுபவம் வாய்ந்தவர். ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். அத்துடன் அதிக ஓவர்கள் வீசுவார்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அசத்தக்கூடியவர்கள். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கும். குறிப்பாக சுழற்பந்து வீச்சில்’’ என்றார்.
    ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் தெரிவித்துள்ளார். #Bhuvi #Bumrah
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்தியா புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

    அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பும்ராவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    பும்ரா முதல் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாது நிலையிலும், புவனேஸ்வர் குமார் எந்த போட்டியில் களம் இறங்குவார் என்பதும் தெரியாமல் உள்ளது. அவர்கள் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.



    இந்நிலையில் ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், இந்திய அணி பயிற்சியாளரும் ஆன மதன் லால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. அனைத்து பவுலர்களும் ஒன்றிணைந்து தீயாக பந்து வீச வேண்டும். ஒரு செசனில் கூட எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது. சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்தியா அணியில் ‘ஸ்விங் மன்னன்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின்போது வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக இருப்பார் என்று கருதப்பட்ட ‘ஸ்விங் கிங்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘‘நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகின் அடிப்பாகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் பிசிசிஐ மெடிக்கல் குழுவால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அணியில் அவருடைய பெயர் விரைவில் இடம்பெறும்’’ என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.



    இன்னும் 13 நாட்கள் உள்ளதால் புவனேஸ்வர் குமார் முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது. அதேவேளையில் பும்ரா காயத்தில் இருந்து மீண்டால் 2-வது டெஸ்டில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #ENGvIND #DK #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. மோர்கன் டாஸ் சுண்ட விராட் கோலி ஹெட் என அழைத்தார். ஆனால் டெய்ல் விழ, மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.



    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளால் இன்றைய போடடியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமானார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள்.

    முதல் ஓவரை அறிமுக வீரர் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் விரட்டினார். அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் ராய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் துரத்தினார்.



    6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரில் ராய் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக்கொடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

    சாஹல் வீசிய 7-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ராய். 8-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 9.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த இங்கிலாந்து ஸ்கோரில் சற்று வேகம் குறைந்தது. இருந்தாலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

    இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 38 விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சித்தார்த் கவுல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சாஹர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. சாஹர் அறிமுகமாகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.



    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    முதல் டி20 போட்டியின்போது குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் செய்த காரியங்கள் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடி சதத்தால் இந்தியா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. தனிப்பட்ட முறையில் இப்படி செய்ய நான் நினைக்கமாட்டேன். இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்’’ என்றார்.
    அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
    ×