என் மலர்
நீங்கள் தேடியது "DK"
- ‘உலகெங்கும் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- நூலை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார்.
'உலகெங்கும் கலைஞர்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சென்னை வளர்ச்சி கழகம் சார்பில் சட்டக் கதிர் ஆசிரியர் எழுதிய இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, திராவிடர் கழக தலைவர் வீரமணி நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
துணைவேந்தர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது, திட்டமிட்ட ஏற்பாடு.
முறையற்ற அரசியல் எனவும் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் விரோதமாக 2 பேர் திட்டமிட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் உயர்ந்தது என்ற தவறான சட்ட விரோதமான ஒரு தடை யானை கொடுக்கப்பட்டு உள்ளது. அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல.
அந்த வழக்கை குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரித்து கடைசி நாளில் தடை வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்று சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
முற்றிலுமாக நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்தில் ஆனது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தமிழகத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கத்தை ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என சொல்லுவது, நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செயல்படுவோம் என்பது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஷிகர் தவான் ரன்ஏதும் எடுக்காமலும், புஜாரா 1 ரன்னிலும், ரகானே 17 ரன்னிலும் வெளியேறினார்கள். 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தாலும் முரளி விஜய் 53 ரன்களும், விராட் கோலி 68 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.
அடுத்து வந்த லோகேஷ் ராகுலும் 58 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, முரளி விஜய், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்துள்ளனர். இதனால் ஆடும் லெவன் அணியில் யாரெல்லாம் இடம்பிடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தொடக்க வீரர்களான களம் இறங்க இரண்டு பேருக்கே வாய்ப்பு என்பதால் முரளி விஜய், தவான், லோகேஷ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். #MuraliVijay #KLRahul #Dhawan
இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.
18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளால் இன்றைய போடடியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.






