search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dasara festival"

    • மைசூரு தசரா விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த சிம்மாசனத்தில் 280 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு

    உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மன்னர் தர்பார் நடத்த உள்ளார். இதற்காக அவர் அமரும் தங்க, வைர நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.

    அந்த சிம்மாசனம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் சிம்மாசனத்திற்கு என்று பண்டைய வரலாறும், புனிதத்தன்மையும் உண்டு. சிம்மாசனத்தை பார்ப்பதையே அக்காலத்தில் மக்கள் பெரும் பாக்கியமாக கருதியதாக கூறப்படுகிறது. இந்த சிம்மாசனம் முதலில் பாண்டவர்கள் வசம் இருந்துள்ளது. அதன்பிறகு மண்ணில் புதைந்திருந்த இந்த சிம்மாசனத்தை விஜயநகர பேரரசு காலத்தில் மன்னர் வித்யாரண்யரால் கண்டறியப்பட்டு உள்ளது. விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பின் இந்த சிம்மாசனம் மீண்டும் மண்ணில் புதையுண்டது. மேலும் சிம்மாசனம் புதைந்திருந்த இடம் மண் குவியலாக இருந்தது.

    பின்னர் 1610-ம் ஆண்டு விஜயநகர அரசர் ரங்கராயர் இந்த சிம்மாசனத்தை கண்டெடுத்தார். அவர் இந்த சிம்மாசனத்தை அப்போதைய மைசூரு மன்னர்களுக்கு பரிசாக வழங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் வசம் இந்த சிம்மாசனம் இருந்தது. ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தவில்லை.

    திப்பு சுல்தானின் மறைவிற்கு பிறகு இந்த சிம்மாசனம் யது வம்சத்திடம் வந்தது. அதில் முதன்முதலாக மும்மடி கிருஷ்ணராஜ உடையார் இந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்து முடிசூடிக் கொண்டார். அதன்பிறகு வந்த யது வம்ச மன்னர்கள் அனைவரும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தனர். மேலும் கடந்த 1940-ம் ஆண்டு வரை இந்த சிம்மாசனத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன.

    இந்த சிம்மாசனம் அத்தி மரத்தால் செய்யப்பட்டது. அதன்மீது வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த சிம்மாசனத்தை 3 பிரிவுகளாக பிரித்துள்ளனர். முதலில் படிகள், இரண்டாவது அரசன் இருக்கை, மூன்றாவது அரசன் குடை என்று குறிப்பிடுகிறார்கள். அரசன் இருக்கை கூர்மாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள மிருதுவான பஞ்சு மற்றும் தலையணைகள் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட துணிகளால் ஆனது.

    அரசன் இருக்கைக்கு செல்லும் படிகளின் எண்ணிக்கை 7 ஆகும். இந்த படிகளில் தர்ம, அர்த்த, காம மோட்சங்களைக் குறிக்கும் வகையில் 4 சக்கரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. படிகளின் இருபுறமும் சலபஞ்சிகே எனப்படும் பெண் பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இருக்கையின் பின்புறத்தில் பறவைகள், சிங்கம் மற்று பூக்களின் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடுவில் சாமுண்டீஸ்வரி தேவியும், இருபுறமும் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியும் உள்ளனர். 8 திசைகளின் கடவுள்கள் என்று அழைக்கப்படும் அஷ்ட திக்பாலகர்களால் இந்த சிம்மாசனம் சூழப்பட்டுள்ளது.

    அரசன் இருக்கையை குதிரைகள் குதிக்கும் தோரணையில் தாங்கி நிற்கின்றன. அரசன் இருக்கையின் தெற்கில் பிரம்மாவும், வடக்கில் சிவனும், நடுவில் விஷ்ணும் அலங்கரிக்கின்றனர்.

    மன்னர் பெற்ற வெற்றியின் அடையாளங்களாக சிங்கங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இருக்கையின் 3 விளிம்புகளில் 2 குதிரைகள், 2 புலிகள், 4 நாரைகள் அழகுடன் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மாசனம் பின்புறம் அரச சின்னமான கந்தபெருண்டா செதுக்கப்பட்டு உள்ளது. அதன்கீழ் 'சத்யமேவூதரகம்' என்ற மேற்கொள் இருக்கிறது. 'சத்யமேவூதரகம்' என்பதற்கு 'நான் எப்போதும் உண்மையை நிலை நிறுத்துவேன்' என்று பொருளாகும்.

    சிம்மாசனம் மொத்தம் 2.25 மீட்டர் உயரம் கொண்டது. அரசன் இருக்கை மீது குடை அமைக்கப்பட்டு உள்ளது. அது முழு அரச இருக்கைக்கும் நிழல் தருகிறது. அந்த குடையின் மீது மன்னரை ஆசீர்வதிக்கும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

    'ஹுமா' என்ற ஒரு வகை வானப்பறவையின் நிழல் யார் மீது விழுகிறதோ அவர்கள் எப்போதும் அரச கிரீடத்தை அணிவார்கள் என்று நம்பப்படுகிறது. அதுபோல் இந்த குடை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த சிம்மாசனம் தொடர்பாக சில கல்வெட்டுகளும் உள்ளன. அந்த கல்வெட்டுகளில், 'பூமியின் இறைவன்', 'சாமுண்டீஸ்வரி தேவியின் ஆசீர்வாதத்தால் பிரகாசிக்கும் சாமராஜாவின் மகன்' என்று கிருஷ்ணராஜ உடையாரை குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் 'நீ கர்நாடக ரத்ன சிம்மாசனத்தின் இறைவன், உன்னுடைய உன்னதமான முன்னோர்களிடம் இருந்து நீங்கள் பெற்ற தங்க சிம்மாசனத்தின் தங்க குடை, உலகம் முழுவதும் பிரமிப்பை தூண்டுகிறது' என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சிம்மாசனத்தில் தோராயமாக 280 கிலோ தங்கம் மற்றும் வைரம், நவ ரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிம்மாசனத்தின் 8 பாகங்களையும் சலபஞ்சிகா, சக்கரங்கள், குதிக்கும் குதிரைகள், குஷன் கொண்ட அரச இருக்கை, தலையணைகள், கந்தபெருண்டா உள்பட 8 பெயர்களில் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

    • தசரா திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது.
    • அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

    சென்னை

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

    தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவர்.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை போன்ற இடங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

    தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்களில் சிலர் திருவிழாவின் 10 நாட்களும், பலர் கடைசி 5 நாட்களும் என தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் சொந்த ஊரில் இருந்தபடி அம்மனுக்கு வேடமணிந்து தசரா குழுக்களில் பங்கேற்று விட்டு திருவிழா முடிந்ததும் தாங்கள் தொழில் செய்து வரும் ஊர்களுக்கு திரும்புவர்.

    இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தலின்படி சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    தசரா திருவிழா முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு திரும்பும் வகையில் அக்டோபர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, குலசேகரபட்டினத்துக்கு ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும், tnstc எனப்படும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    • உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. குலசை கிராமத்தில் உள்ள ரோடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக கோவிலில் இருந்து பக்தர்கள் கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என பொது மக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே குலசை நகரில் தசரா திருவிழாவிற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், கவுன்சிலர் ஜான் பாஸ்கர், குலசை பஞ்சாயத்துதுணைத் தலைவர் கணேசன், தி.மு.க.வை சேர்ந்த பாய்ஸ், ஷேக் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் யூனியன் சேர்மன் பாலசிங் கூறியதாவது:-

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சாலை, குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, பஸ் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலை புதியதாக போட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேட்ஜ் ஒர்க் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரம் அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
    • 7-ந்தேதி சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    முதலாம் திருநாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் கைகளில் திருக்காப்பு அணிவிக்கப்படுகிறது. காப்பு அணியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    11-ம் திருநாளான 6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    12-ம் திருநாளான 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது.
    • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    மைசூரு தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 14 யானைகளுக்கும் பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை அபிமன்யு என்ற யானை சுமக்க உள்ளது.

    இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது. மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் இருந்து அம்மன் சிலை எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தி விசேஷ பூஜை செய்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    அப்போது அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியா, கோவில் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு ஆகியோர் இருந்தனர். தசரா விழா தொடக்க நாளான 26-ந்தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அலங்கரித்து நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    விஜயதசமி நாளன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக கோவிலில் இருந்து அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பக்தர்களுக்கு வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    உடன்குடி

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வசிக்கும் தசரா திருவிழாவாகும்.

    திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். 2 வருடமாக கொரோனா தாக்கத்தால் கோவில் முன்பு நடந்த சூரசம்ஹாரம் இந்த ஆண்டு முதல் மீண்டும் கடற்கரையில் நடக்கிறது.

    காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள் என கடும் விரதம் இருந்து காளி வேடமணிவது மிகவும் சிறப்பாகும். மேலும் 100-க்கும் மேற்பட்ட சுவாமி வேடங்களை அணிந்து 10-ம் திருநாளான சூரசம்ஹாரம் அன்று ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அன்னை முத்தாரம்மன்னை பின்தொடர்ந்து சென்று சூரனை சம்ஹாரம் செய்யும் காட்சி காண முடியாத ஒரு அரும்பெரும் காட்சியாகும். இப்படி சுவாமி வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மிகமிக முக்கியமானது தலைமுடிதான்.

    உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சடைமுடி, அலங்கார முடி, சுவாமி முடி, முனிவர்கள் முடி இப்படி விதவிதமான முடிகளை தயாரிப்பது தீவிரம் காட்டி வருகின்றனர். சிலர் தலையின் சுற்றளவு கொடுத்து அதற்கு தகுந்தார் போல் முடிகளை தயார் செய்ய முன் ஆர்டர் கொடுக்கின்றனர்.

    ரூ.1000 முதல் ரூ.3500 வரை தரம்வாரியாக முடிகள் உள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். கோவிலில் கொடி ஏறியதும் கோவிலில் திருகாப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்குப் பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து 10-ம் திருநாள் ஆன சூரசம்ஹாரம் அன்று கோவிலில் காணிக்கையை சேர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு அனைத்து மாநிலங்களிலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்து அம்மனுக்கு வேடம் அணிவது சிறப்பாகும்.

    சுமார் 10 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும். சிறுவர்களுக்கு பிடித்தமான குரங்கு, கரடி, புலி என்று பல்வேறு மிருகங்கள் வேடம் அணிவதும் பெண் வேடம் மற்றும் மாடல் அழகிகள் உட்பட எண்ணிக்கையில் அடங்காத வேடங்கள் அணிந்து, வேடங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற சொல்லுக்கு ஏற்ப வேடம் அணிவார்கள்.

    சுவாமி வேடம்அணியும் சில பக்தர்களை பார்க்கும்போது அந்த சுவாமியே நேரடியாக வந்து காட்சி கொடுப்பதாக தெரியும், இப்படி வேடம் அணிந்தவர்கள், பழங்கால தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் கரகம், காவடி, நையாண்டி, கோலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சியுடன் ஊர் ஊராகராக சென்று தசரா குழு உடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி, அம்மன் பெயரின் காணிக்கை வசூல் செய்வது ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

    தசரா திருவிழாவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் குலசேகரன்பட்டினத்தில் வேகமாக நடந்து வருகிறது, வாகனங்கள் வந்து செல்லும் ஒரு வழிப்பாதை, இருசக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களை எதுவரை அனுமதிப்பது? அவசர தேவையான வாகனங்கள் எந்த வழியாக வருவது?போவது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர்.

    உடன்குடி, குலசை, திருச்செந்தூர், பகுதியில் ஏராளமான கடைகளில் தசரா வேடம் போடும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களும் மலை போல் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.
    • தசரா திருவிழா செப்டம்பர் மாதம் அமாவாசையன்று தொடங்குகிறது.

    பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற செப்டம்பர் மாதம் அமாவாசை தினத்தன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆயிரத்தம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கால்கோள் விழாவுக்கான கொடிகம்பம் அர்ச்சனை செய்யப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.40 மணி அளவில் கால் நாட்டப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.

    இதேபோல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மற்ற அம்மன் கோவில்களிலும் நேற்று கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும்.
    • மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது.யூனியன் தலைவர்பாலசிங் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மீராசிராசுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, சசிகுமார், மேலாளாளர் வாவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, தங்க லெட்சுமி, மெல்சி ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொது கழிப்பிடம்

    கூட்டத்தில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் 2022- 23-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் மூலம் செட்டியா பத்து ஊராட்சி அருணாச்சலபுரம் - செட்டியாபத்து பெருமாள் கோவில் வரை தார் ரோடு, குதிரை மொழி ஊராட்சி சுந்தராச்சியம்மன் கோவில் அருகேயும், பரமன்குறிச்சி ஊராட்சி வீரப்ப நாடார்குடியிருப்பு அம்மன் கோவில் அருகேயும், செம்மறிகுளம் ஊராட்சி செம்மறிகுளம் அம்மன் கோவில் அருகே என மூன்று இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட, லெட்சுமிபுரம் ஊராட் பூலோகபாண்டி விளையில் 60 ஆயிரம் சிலிட்டர் ஒஹச்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் என மொத்தம் ரூ.57 லட்சத்து 16 ஆயிரத்து 680 நிதியில் பணி தேர்வு செய்யப்பட்டது.

    குடிநீர் தொட்டி

    மேலும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து குதிரை மொழி ஊராட்சி சேலை குடியிருப்பில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.12 லட்சத்து 89 ஆயிரம், மெஞ்ஞானபுரம் ஊராட்சி அஸ்ரியா நகரில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட ரூ.15 லட்சத்து 21 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யூனியனில் உள்ள பள்ளிகளின் பழுதான கட்டிடம் கட்ட, கழிப்பறை கட்டுதல் உட்பட 9 பணிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் ஒதுக்கீடு மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    பின்னர் விவாதம் நடந்தது. அப்பேது, முருங்கை மகாராஜா (அ.தி.மு.க., கவுன்சிலர்) பேசுகையில்,

    உடன்குடி யூனியனில் கிராம பகுதிகளில் உள்ள பல ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதை உடனடியாக மரமாத்து செய்ய வேண்டும் என்றார்.

    முருகேஸ்வரி ராஜா துரை (அ.தி.மு.க.,) பேசுகையில்,

    இந்தியாவில் தசரா திருவிழாவில் 2- வது இடம் வகிக்கும் குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலினால் தசரா திரு விழாவில் பக்தர்கள் அனுமதியில்லை.

    இதனால் குலசை நகரின் உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக தசரா பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் முத்தாரம்மன் கோவில் கீழ தெரு முதல் கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு, கோவில் கீழ்புறம் தும்பு மில்லில் இருந்து கடற்கரை செல்லும் ரோடு, வடக்கூரில் இருந்து கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு ஆகிய மூன்று ரோடுகளும் பக்தர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய ரோடுகள்.

    தற்சமயம் இந்த ரோடுகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு பணியாக யாதவர் தெரு, கல்லா மொழி வடக்கு தெரு, தெற்கு தெருவில் சிமெண்ட் ரோடும், குலசை அண்ணா சிலை அம்மன் கோயில் அருகில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் குறிப்பாக தசரா திருவிழாவிற்கு முன்பாக ரோடு, குடிநீர், பைப் லைன், கழிவறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை இன்று முதல் நிர்வாகம் தொடங்க வேண்டும் என பேசினார்.

    இதற்கு பதிலளித்து பாலசிங் பேசியதாவது:-

    உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழாவில் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தற்போது இருந்து விரிவான திட்டம் வகுத்து பணிகள் தொடங்கப்படவுள்ளது என பேசினார்.

    முன்னதாக மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா 4-ம் நாள் திருவிழாவில் அம்மன் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன்கள், பஸ்கள், கார்கள் போன்றவற்றில் கோவிலில் குவிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு கட்டிய பல ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அம்மனுக்கு காணிக்கை சேகரித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாரா‌ஷ்டிரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழாவின் 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பாலசுப்பிரமணியர் திருகோலத்தில் அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று முன்தினம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர் கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கசலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

    அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், அதிகாலை 5 மணிக்கு சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக் கிறது. மாலையில் சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. #Dasarafestival

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

    இதில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் நடந்ததும் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டி பின்பு தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

    பக்தர்கள் காளி, முருகன், பரமசிவம், பார்வதி, கிருஷ்ணர் போன்ற பல்வேறு விதவிதமான வேடங்களை வித்தியாசமான ரசனையில் அணிந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முக்கிய ஊர்களில் சுற்றி வருவார்கள்.


    வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்கார பொருட்கள் மிகவும் அவசியம். தலை, கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, ஒட்டியானம் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணியில் உடன் குடியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளிகள் கூறுகையில், ‘சுவாமி வேடம் அணிபவர்கள் தலை கிரீடம், கண்மலர், வீரப்பல் போன்ற பொருட்களுக்கு முன்பதிவு செய்பவர்கள் அதிகம். தசரா குழுவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொத்தமாக முன்பதிவு செய்து முன்தொகையும் தந்துவிடுகிறார்கள். தனித் தனியாக வேடம் அணியும் பக்தர்கள் தங்கள் அளவுகளை கொடுத்து செல்கிறார்கள். தினசரி கூலிக்கு ஆட்கள் வைத்து இந்த பணிகள் நடந்து வருகிறது‘ என்றார். #Dasarafestival

    ×