என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா
Byமாலை மலர்15 Oct 2018 4:34 AM GMT (Updated: 15 Oct 2018 4:34 AM GMT)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா 4-ம் நாள் திருவிழாவில் அம்மன் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன்கள், பஸ்கள், கார்கள் போன்றவற்றில் கோவிலில் குவிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
விரதம் இருந்து காப்பு கட்டிய பல ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அம்மனுக்கு காணிக்கை சேகரித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
திருவிழாவின் 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பாலசுப்பிரமணியர் திருகோலத்தில் அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று முன்தினம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன்கள், பஸ்கள், கார்கள் போன்றவற்றில் கோவிலில் குவிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
விரதம் இருந்து காப்பு கட்டிய பல ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அம்மனுக்கு காணிக்கை சேகரித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
திருவிழாவின் 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பாலசுப்பிரமணியர் திருகோலத்தில் அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று முன்தினம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X