search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தசரா விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காக பீரங்கி பயிற்சி.
    • பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.

    கர்நாடக மாநிலம், மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா நடைபெறுவது வழக்கம்.

    தசரா விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மைசூரு அரண்மனை, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், முக்கிய வீதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர தசரா ஊர்வலம் தொடங்கும் அரண்மனை முதல் பன்னிமண்டபம் நடைபெறும் 5 கிலோ மீட்டர் தூரம் வழிநெடுகிலும் உயர் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காக பீரங்கி பயிற்சி நடைபெற்றது. அப்போது, பீரங்கியில் குண்டு வெடித்தபோது அருகே இருந்த ஊழியர் மீது நெருப்பு பிடித்து படுகாயம் அடைந்தார்.

    அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    குலசேகரபட்டிணம் முத் தாரம்மன் கோவிலில் வரு கிற 24-ந்தேதி தசரா திரு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அங் குள்ள முத்தாரம்மனை வேண்டி கொண்டால் வேண்டியது நடக்கும் என் பது நம்பிக்கை. இதை யொட்டி, தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தசரா அன்று தினம் முத்தாரம் மனை தரிசிக்க செல்வது வழக்கம்.

    அந்த வகையில், சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக் தர்கள் வருடந்தோறும் தசரா திருவிழாவிற்கு காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி கள் வேடமிட்டு செல்வார் கள். இந்தாண்டு திருவிழா–விற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை குலசேகரபட்டினம் செல்ல உள்ளனர்.

    இதற்காக வேடமிட்ட பக்தர்கள் திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வேடமிட்டு சென்று வழிபட்டனர். நோயாளி, அம்மன், பிச் சைக்காரன், குறத்தி உள் ளிட்ட வேடமிட்டு பக்தர் கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதுபற்றி பக்தாகள் கூறு கையில், குலசேகரபட்டினம் முத்தாரம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரி யம் நிறைவேறும். நோய் தாக்குதல், விபத்தில் காயம டைந்தவர்கள் அம்மனை வேண்டி கொண்டு நலம் பெற்றால் நோயாளி வேட மிட்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அதேபோல தொழிலில் நஷ் டம் அடைந்தவர்கள் பிச் சைக்காரன் வேடமிட்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். நாங்கள் இன்று வேடமிட்டு நகரை வலம் வந்துள்ளோம் என்றார்.

    ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடமிட்டு வலம் வருவார் கள். சிவகங்கை மாவட்டத் தில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர் கள் காளி மற்றும் சுவாமிகள் வேடமிட்டு ஆண்டு தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    • மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர்.
    • மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தாம்பூலம் வழங்கினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் தசரா முதல் நாள் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவி ஷைனி பிரித்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி அனுபாமா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் துர்க்கையின் கைகளில் இருக்கும் 10 ஆயுதங்களின் பயன்களை பற்றி மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர்.

    மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக ஆலோசகர் உஷா ரமேஷ் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் இணைந்து தாம்பூலம் வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா, பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர் மற்றும் வனிதா ஆகியோர் செய்திருந்தனர். 

    • காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தொடங்கிய தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.

    மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தொடங்கிய தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. அதே நேரத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள்.
    • ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள்.

    கோவிலில் தசரா பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன், விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.

    இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள்.

    அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

    விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்ப தில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

    முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

    • வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.
    • அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    தசரா விழா தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் புராணக்கதை ஒன்று உண்டு.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்கவனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது அவரை மதிக்கத்தவறியதுடன் அவமரியாதையும் செய்தான், இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார்.

    செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடன், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.

    எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான்.

    வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.

    தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அவர் அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள் உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன். தேவர்களும் அன்னையை நோக்கி விடா முயற்சியுடன் கடும் தவம் புரிந்தனர்.

    முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது.

    இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள்.

    மகிஷாசூரனை அழித்த 10- ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    முதல் மூன்று நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் மூன்று நாட்கள் அலைமகளாகவும், இறுதியில் வரும் மூன்று நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை. மகிஷாசூரணை வதைத்ததால் அன்னை மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    • ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது.
    • தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் 12 நாட்கள் தசரா விழா நிகழ்த்தப்படுகிறது. இவ்விழாவில் கொடியேற்றல், காப்புக்கட்டுதல், நோன்பிருத்தல், வேடம் புனைதல், காணிக்கை பெறுதல், அம்மன் மகிசனை வதம் செய்தல், காப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழிபாடுகளைக் காண முடிகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்று ஒரு முனிவன் தவ வலிமைமிக்கவனாக வாழ்ந்து வந்தான். எனினும் ஆணவத்தால் கட்டுண்டு அறிவுக் கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒருநாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் வரமுனி அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோட அவமரியாதையும் செய்தார். மனம் வெறுத்த அகத்தியர் வரமுனியை நோக்கி, எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார்.

    அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினான். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றான். முனிவனாக வாழ்வைத் தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய பராசக்தி மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசனை அழித்த பத்தாம் நாள் தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    தேவர்கள், மகிசாசுரன் செய்த துன்பத்தைச் சிவனிடம் முறையிட்டனர். அவன் மேல் சிவனிடம் உண்டான சீற்றம் பெண்ணுருவாய்த் திரண்டது. அதுவே காளியுருவம்.

    கர்நாடகத்தில் நவராத்திரிப் பண்டிகையைச் சாமுண்டேசுவரிக்கு விழா எடுத்துத் தசரா என்று அழைக்கிறார்கள். இதை அவர்கள் தசராத்திரி, மகாநவமி என்றும் அழைப்பதுண்டு. சக்திப் பூசை இதில் சிறப்பாக இடம் பெறுகிறது. ஒன்பது வடிவங்களைக் கொண்டவளாகத் தேவி பூசிக்கப்படுகிறாள்.

    எருமை முகம் கொண்ட மகிசாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்த, தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் கோபம் அக்னி ஜுவாலையாகப் பிறந்து ஒன்றாக இணைய, அதிலிருந்து துர்க்கா தேவி தோன்றினாள். துர்க்கைக்குப் பத்துக்கரங்கள். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு ஆயுதங்கள், பல்வேறு கடவுள் அளித்தவை. என்றாலும் சிவபெருமான் அளித்த திரிசூலத்துக்குத்தான் மகிசாசுரனை அழித்த பெருமை கிடைத்தது. மகிசனைத் துர்க்கை வதம் செய்த நாள்தான் வெற்றித் திருநாள் என்று பொருள் கொண்ட விஜயதசமி. மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜா இதுவே நவராத்திரியாகும்.

    ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது. ராவணனை ராமபிரான் வென்ற பத்தாவது நாளைத்தான் விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம் என்ற நம்பிக்கையும் நம் நாட்டில் பரவலாக உள்ளது. நவராத்திரியைத் தசராப்பண்டிகை என்று அழைப்பதே இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    மகிசாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து தனக்குத் தேவர், மனிதர், அசுரர்களால் மரணம் ஏற்படக்கூடாது என்று வாக்கினைப் பெற்றான். ஆண்களால் மரணம் நேரிடக்கூடாது என்று அந்த அரக்கன் வரம் பெற்றமையால், சண்டிதேவியால் அவனுக்கு அழிவு நேரிடுகிறது. தேவி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்ததால், தேவி மகிசாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறாள். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய சக்திகளின் வடிவமாகத் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் நவராத்திரியில் வழிபடுவது தமிழ்நாட்டவர் மரபு. நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று அந்திவேளையில் தேவி மகிசாசுரனை அழித்தாள்.

    மகிசம் என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத் தலையுடைய அசுரன் என்று பொருள். இம்மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத வானவர்களும் முனிவர்களும் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசாசுரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தைக் கண்டு உள்ளம் இரங்கினாள் அன்னை. மாமுனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள். மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வினை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியில் ஒரு பெண் மகவு தோன்றியது. அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் மகவு ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, பத்தாம் நாள் அன்னை பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த பத்தாம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது.

    மேலே கூறப்பட்ட கதைகளுள் ஒன்று மட்டும் தசரா விழாவை ராவண வதத்தோடு தொடர்புபடுத்துகிறது. ஏனையவை யாவும் தேவி மகிசாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியோடு தசராவைத் தொடர்பு படுத்துகின்றன. மேலும் நவராத்திரி நாட்களில் தேவியே வெவ்வேறு சக்திகளின் வடிவில் கொலுவிருத்தல் மரபாக உள்ளது. தவிர இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இவ்விழாவைச் சக்தி வழிபாடாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

    எனவே இவ்விழாவைச் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கொள்வதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலிலும் மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை மையமாகக் கொண்டே நவராத்திரி விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டுத் தெய்வம் அவதாரம் எடுக்கும் என்ற இந்து சமயக் கொள்கை உட்பொருளாக வெளிப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பன்னிரு நாட்கள் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே தசரா விழாவாகும். இவ்விழாவின் பத்தாம் நாளன்று மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய அம்சமாகப் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் தென்பகுதி எங்கும் விழாக்கோலம் பூணும் வகையில் இத்தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவைக் கிராமியத் தன்மையுடன் விளங்கும் கலை விழா என்று கூறலாம். திருச்செந்தூரில் கந்தசஷ்டியின் போது கடற்கரையில் மிகப் பெரியளவில் பக்தர்கள் கலந்து கொள்ளுதலைப் போன்று இவ்விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    காப்புக் கட்டுவது திருக்கோவிலின் மரபு. கொடியேற்றி அது இறக்கப்படும் வரை இவ்வூரார் பிறவூர்களுக்குச் செல்லுதல் கூடாதென்றும் செல்ல நேரின் காப்பவிழக்கும் முன் திரும்ப வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. காப்புத்தடை நாட்டுப்புற மக்களிடையே ஊறிப்போன வழக்காறு. ஏனைய தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் இதனைக் கட்டுவதாகக் கருதப்படுகிறது.

    முத்தாராம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் அமாவாசையன்று இரவு எட்டு மணிக்குக் கருவறைத் தெய்வங்களான அம்மனுக்கும் சுவாமிக்கும் பூசை நடத்தப்பட்டுக் காப்புக் கட்டப்படுகிறது. பின்னர் அக்கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. தெய்வங்களுக்குக் காப்புக் கட்டுதலைப் பூசாரியே செய்கிறார். கோவில் பூசாரிகளுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. இதனை அவர்கள் ஒருவருக்கு மற்றவர் எனக் கட்டிக் கொள்கின்றனர். தெய்வங்களுக்குக் காப்புக் கட்டப்பட்ட மறுநாள் கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்களுக்குக் கட்டப்படுகிறது. காப்புக் கட்டிய பிறகு பக்தர்கள் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.

    பூசாரிகள் காப்புக் கட்டிய பின் அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் தீட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் காப்புக் கட்டியவரைத் தீட்டுக் கட்டுப்படுத்தாது. அவர்கள் விழாச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம். காப்பு அவிழ்க்கும் வரை அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் உண்டு.

    காப்புக் கட்டிய நாளன்று முளைப்பாரி வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பூசாரி கோவில் சார்பாக ஒரு முளைப்பாரி மட்டும் வைக்கிறார். முளை வைக்க விரும்புவோருக்கு அந்நாளில் முளைப்பாரிகளை வைக்கின்றனர். பதினொரு நாட்கள் இம்முளைப்பாரிகள் சிதம்பரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்படுகின்றன. சூரசம்ஹாரத்தன்று இவை முத்தாரம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, நண்பகல் பூசை முடிந்த பிறகு எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன.

    காப்புக் கட்டிய நாள் முதல் தசராப் பக்தர்கள் நோன்பு மேற்கொள்கின்றனர். சூரசம்ஹாரம் வரை இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவேளை உண்டு, தூய்மை மேற்கெண்டு, தனியிடத்தில் தங்கி, இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    தசரா விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி கொடியேற்றம் ஆகும்.

    கொடியேற்று விழா, மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கும் உயிர் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள அருளை நாடுவதைக் குறிக்கிறது. பஞ்சாட்சரத்தினால் வீடு பேற்றை அடைவிப்பதைக் காட்டுவது கொடியேற்றுவிழா.

    முத்தாரம்மன் கோவிலில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபிற்கேற்பக் கொடியேற்றமும் பன்னிருநாள் திருவிழாவும் தசராவின்போது நிகழ்கின்றன. திருவிழா நாட்கள் யாவற்றிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்கு முன்னர் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் வருகிறது. ஊர் முழுவதும் வீதிஉலாச் செல்லும் கொடிப்பட்டம் மீண்டும் கோவிலுக்குள் திரும்பி வருகிற வேளையில் ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று ஆவேசக் கூச்சலிடுகின்றனர்.

    கொடிப்பட்டம் வெண்மையான கச்சைத் துணியால் செய்யப்பட்டதாகும். இத்துணி பதினெட்டு முழ அகலமும் ஐம்பெத்தொரு முழ நீளமும் கொண்டது. கொடியேற்றப் பயன்படும் நூல்கயிற்றின் அளவு இருபத்தேழு முழம் ஆகும்.

    வீதி உலாச் சென்று வந்த கொடிப் பட்டம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டதும், அம்மனுக்குப் பூசை செய்யப்படுகிறது. அதன்பின் கொடிமரத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. கொடி மரத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்தின் முன் கொடி வைக்கப்பட்டு, சிறிய யாகமும் பூசையும் நடத்தப்படுகின்றன. பின்னர்க் கொடிக்குச் சிறப்புப் பூசைகளும் தீபாராதனைகளும் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்படுகிறது. கயிற்றில் கட்டப்பட்ட கொடி மேளதாளத்தோடும் பெண்களின் குலவைச் சத்தத்தோடும் மேலே ஏற்றப்படுகிறது.

    கொடி மரத்தின் கீழ்ப்புறத்தில் நாற்புறங்களிலும் தர்ப்பைப் புல் சிறுசிறு பகுதிகளாக முடிச்சிடப்பட்டு கட்டப்படுகிறது. முடிச்சிகளுக்குள் என்ற வடிவில் மர அச்சுக்கள் செருகி வைக்கப்படுகின்றன.

    தர்ப்பைப் புல்லைச் சுற்றிக் கீழ்ப்புறமாகச் சிறப்பு நிறக் கதர்த்துணி ஆடைபோல் கட்டப்படுகிறது. அதன்பின் பீடப்பகுதியில் அபிஷேகம் நடைபெறுகிறது. பலிபீடத்திற்கும் சேர்த்தே பூசை நடைபெறுகிறது. மஞ்சள் நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம் ஆகியவற்றால் தனித் தனியாக அபிஷேகம் நடைபெற்று, ஒவ்வொருமுறையும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடிமரத்தைச் சுற்றிலும் சிறு குடங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் உள்ள புனித நீரால் கொடி மரப்பீடமும் பலி பீடமும் நீராட்டப்படுகின்றன. சந்தனமும் குங்குமமும் பூசப்படுகின்றன. பின்னர்க் கொடி மரப் பீடத்தைச் சுற்றிப் பட்டுத் துணி கட்டப்படுகிறது. தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு மாலைகள் சூட்டப்பட்டு, நாக வடிவ விளக்கு முதலான பல்வேறு விளக்குகளால் தீபராதனை செய்யப்படுகிறது.

    பூசாரிகள் இருவர் கொடி மரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமர்ந்து சந்தனத்தால் சிறு சிலை போன்ற உருவத்தைச் செய்கின்றனர். அதை அம்மனாகப் பாவித்துச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம் முதலானவற்றைப் படைத்து, வைத்துப் பூசை செய்கின்றனர். பின்னர் வெண்பொங்கல் மட்டும் கொடி மரத்தைச் சுற்றிக் கீழே நான்குபுறமும் வைக்கப்படுகிறது. தொடர்ந்த மீண்டும் தீபாராதனை செய்யப்பட்டு, பூசைப் பொருட்கள் அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    கொடி பதினோராம் நாளில் இறக்கப்படுகிறது. ஏற்றியவர்களே கொடியை இறக்க வேண்டும் என்பது மரபாகும். கொடியேற்றம் நேரத்தைப் பூசாரிகள் பஞ்சாங்கம் பார்த்துக் கணிக்கின்றனர். ஆனால் கொடி இறக்கும்போது நாள், நேரம் பார்ப்பதில்லை.

    கொடித்துணியைப் பூசாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கொடியேற்றத்திற்காகக் கொடித்துணி, கொடிக்கயிறு இவற்றை வாங்கும் செலவைக் கட்டளைதாரர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவை திருச்செந்தூரில் வாங்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப்புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப் புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்குத் தத்துவ விளக்கம் கூறப்படுகிறது. தர்ப்பைப்புல் பாசமாகிய சுத்தமாயையை உணர்த்துவது. கொடித்துணியில் வரையப் பெற்ற தெய்வம் உயிரை (ஆன்மாவை) உணர்த்துவது. கொடி மரத்தில் தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட கொடி ஏறுவது உயிர் சுத்தமாயை துணைக் கொண்டு ஏனைய ஆதாரங்கள் வழியே முறையே மேலே ஏறுவதைக் குறிப்பது. மேலே உச்சியைச் சென்றடைவது உயிர் பேரானந்த நிலையில் நிற்பதனை உணர்த்துவதாகும். இவ்வாறு கோயிற்களஞ்சியம் கொடி மரத் தத்துவத்தைக் கூறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்குக் காப்புக் கட்டுதல் நிகழ்கிறது. நோன்பு மேற்கொண்டவர்களும் நேர்ச்சை செய்வோரும் வேடம் புனைவோரும் பக்தர்களும் வரிசையாகக் கோவிலுக்குள் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். தசராக் குழுவினர் கூட்டமாக வந்து காப்புக் கட்டிக் கொள்வதும் உண்டு.

    தசரா விழா நாட்களில் முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் வீதி உலா வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதக்கிருஷ்ணர், மகிசாசுரமர்த்தினி, ஆனந்த நடராசர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய கோலங்களில் அம்மன் தேரில் வீதி உலா வருகிறாள். பத்தாம் நாள் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை வதம் செய்கிறாள்.

    தசராவிற்கு அணி சேர்த்து அதனைத் தனிப்பெரும் விழாவாக வெளிப்படுத்துகிற சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டை குறிப்பிடலாம். அவை:

    1. சூரசாம்ஹாரம்

    2. வேடம் புனைதல்

    சூரசம்ஹாரம் என்று மக்களால் வழங்கப்படுகிற மகிசாசுர வதம் குலசேகரன்பட்டினத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மகிசனை வதம் செய்து கொல்லும் இந்நிகழ்ச்சியே தசரா விழாவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    மகிசாசுரமர்த்தினி கோலத்தின் சிறப்புக் காரணமாக அதனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் (சிலம்பு. வேட்டுவரி, 7) என்கிறது சிலப்பதிகாரம்.

    இக்கோலம் தமிழகக் கோவில்களில் பரவலாகச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மகிசாசுரன், அவனை மாதகனம் செய்யும் கார்த்தியாயினி, இருதரப்புப்படைகள், போரின் உக்கிரம் ஆகியவற்றைக் கல்லில் அற்புதமாக வடித்துள்ளனர். அன்னையின் உருவம் செப்புச் சிலையாக வேதாரணியம், பட்டீச்சுவரம் முதலிய கோவில்களில் உருப் பெற்றிருக்கிறது.

    மகிசம் என்றால் மந்தம், மடமை, அறியாமை என்று பொருள்படும். அன்னையின் ஆற்றல் முழுவதும் இந்த அறியாமையும், அஞ்ஞானமும் ஒழிந்து ஞானம் பெருகச் செயல்படுகிறது.

    மகிசனை அழிப்பதற்காகத் தோன்றியவளே மகிசாசுரமர்த்தினி. குலசேகரன்பட்டினம் கோவிலில் பத்தாம் நாளன்று முத்தாரம்மன் மகிசனை அழிக்க மகிசாசுரமர்த்தினி கோலத்தில் புறப்படுகிறாள்.

    விழாவின் பத்தாம் நாளான சூரசம்ஹாரத்தன்று நண்பகல் கோவிலில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் ஆகியோருக்கும் துணைத் தெய்வங்களுக்கும் அபிஷேகமும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. மேலும் சூரசம்ஹாரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிற சூலத்திற்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அன்றைய தினம் நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் சூலத்திற்குப் பூசைகள் செய்யப்படுகின்றன. பின்னர் சூலம் பூசாரியால் கோவிலிலிருந்து தேர்மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. தேர் மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான அம்மன் மகிசாசுரமர்த்தினி கோலத்தில் வதம் செய்யத் தயாராக இருக்கிறாள்.

    தேர் மண்டபத்திலிருந்து முதலில் மகிசாசுரன் புறப்படுகிறான். பின்னர் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்ட முத்தாரம்மன் புறப்படுகிறாள். இருவரின் சப்பரங்களும் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் வந்து சேர்கின்றன. கடற்கரைச் சாலையில் நான்கு பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் முதல் பந்தலின் கீழ் அம்மன் வந்ததும், மகிசாசுரன் அம்மனை மூன்று முறை வலம் வருகிறான். பின்னர் அம்மனின் சப்பரத்திற்கும் மகிசனின் சப்பரத்திற்கும் இடையில் கயிறு பிடிக்கப்பட்டு, அக்கயிற்றின் வழியாக ராக்கட் வாணம் பற்றவைக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது. அது கயிற்றின் இருமுனைகளுக்கும் இருமுறை சென்று வருகிறது. இச்செயல் அம்மனுக்கும் மகிசனுக்கும் இடையில் நடப்பது போலச் சித்தரிக்கப்படுகிறது.

    அம்மன் சப்பரத்திலிருந்து சூலாயுதம் புறப்பட்டு, மகிசனின் அசுரத் தலையைக் கொய்கிறது. அப்போது காளிவேடம் அணிந்த பக்தர்களும் தம் கையில் ஏந்திய சூலாயுதங்களுடன் மகிசனைக் கொல்ல ஆவேசமாக வருகின்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் நூறு அடி தொலைவில் உள்ள இரண்டாவது பந்தலுக்கு அம்மன் சப்பரம் நகரத் தொடங்கும் வேளையில் மகிசாசுரன் சிம்மத்தலையுடன் முன்னால் செல்கிறான். அம்மனின் சூலாயுதத்தால் மகிசனது சிம்மத்தலை வெட்டப்படுகிறது.

    மூன்றாவது பந்தலில் மகிசனின் எருமைத் தலை வெட்டப்படுகிறது. இறுதியில் மகிசன் சேவல் தலையுடன் நான்காவது பந்தலுக்குச் செல்கிறான். அங்குச் சேவல் தலை வெட்டப்படுகிறது. உடனே பக்தர்களின் ஆரவாரத்துடன் வாணவேடிக்கை முழங்குகிறது. அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள கடற்கரை மேடையில் எழுந்தருளுகிறாள். வெற்றி வாகை சூடிய அம்மனைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அபிஷேக ஆராதனைகள் அம்மனுக்குச் செய்யப்படுகின்றன. பின்னர் அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல, அங்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அம்மன் தேரில் புறப்பட்டு தேர் மண்டபத்துக்கு வந்து சேர்கிறாள்.

    மறுநாள் அதிகாலை கோவில் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளுகிறாள். அங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீதிஉலாச் செல்லும் அம்மன் மாலையில் கோவிலுக்கு வந்து சேர்கிறாள்.

    பின்னர் கொடி மரத்திலிருந்து இறக்கப்படுகிறது. அம்மன், சுவாமி, பிற தெய்வங்களுக்குக் கட்டப்பட்டுள்ள காப்புக்கள் களையப்படுகின்றன. தொடர்ந்த பூசாரிகளும் பக்தர்களும் காப்புக்களைக் களைகின்றனர். நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று நண்பகல் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பன்னிரண்டாம் நாளன்று காலை எட்டு மணிக்கும் பத்து மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    • யமுனாநகரில் நடைபெற்ற தசரா விழாவில் மிகப்பெரிய அளவில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ராவணனின் கொடும்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது.
    • நல்லவேளையாக, பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை என்று யமுனாநகர் போலீசார் தெரிவித்தனர்.

    தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் பத்து தலை கொண்ட இலங்கை மன்னன் ராவணனை அயோத்தி மன்னர் ராமர் கொன்றொழித்த திருநாளை விஜயதசமி என்ற பெயரில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தசரா என்றும் அழைக்கப்படும் இத்திருநாளன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன் கொடும்பாவியை தீயிட்டு எரித்து, அந்த கொடும்பாவி எரியும் காட்சியை கண்டு மக்கள் பரவசம் கொள்வது வழக்கம். அவ்வகையில், நாடு முழுவதும் தற்போது தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி திடலில் நேற்று (புதன்கிழமை) இரவு ராவணனின் கொடும்பாவியை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து அக்காட்சியை கண்டு களித்தனர். அப்போது, ராவணனின் கொடும்பாவியை வெடித்து சிதறடிப்பதற்காக உள்ளே பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் ஏவுகணகளாக, மாறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தது.

    இதைகண்டு பீதியடைந்த மக்கள், பட்டாசு ஏவுகணைகளில் இருந்து தப்பிப்பதற்காக உயிர் பயத்துடன் ஓட்டம்பிடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும் செய்வதறியாமல் திகைத்தவாறு தலைதெறிக்க ஓடிய காட்சிகளை ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவுசெய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இந்த பதற்றமான களேபரம் ஓய்வதற்குள் அந்த திடலுக்குள் முரட்டுத்தனமாக பாய்ந்துவந்த ஒரு காளை நிலவரத்தை மேலும் கலவரமாக்கி, பார்வையாளர்களை மேலும் பீதிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், அரியானா மாநிலத்தின் யமுனாநகரில் நேற்று நடைபெற்ற தசரா விழாவில் மிகப்பெரிய அளவில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ராவணனின் கொடும்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது. நல்லவேளையாக, பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை என்று யமுனாநகர் போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின்போது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரிட்சர் அருகாமையில் உள்ள ஜோடா பதக் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ராவணன் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

    அங்கு வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்கள் உற்சாகம் மிகுதியால் தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்தபோது இருபுறங்களில் இருந்தும் வேகமாக வந்த இரு ரெயில்கள் மக்கள் கூட்டத்துக்கிடையில் மோதிய கோர விபத்தில் சுமார் 60 பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

    • தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது.
    • ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    மதுரை:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாசம் இன்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று அம்பிகை தசரா குழு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எம்.சி.சாமி, ராஜாராமன் ஆகியோர் ஆஜராகி, குலசேகரன்பட்டினம் திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. ஆனால் கலாசாரம் சார்ந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு கூட போலீசார் அனுமதிக்க முடியாது என வாய்மொழியாக தெரிவித்து வருகின்றனர். அம்மன் வரலாறு, பக்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடிகர், நடிகைகள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆபாசம் இருக்காது. எனவே ஆபாசமின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வாதாடினர்.

    விசாரணை முடிவில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளை முழுவதும் சம்பந்தப்பட்ட தசரா குழுவினரே வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • மைசூரு தசரா விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த சிம்மாசனத்தில் 280 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு

    உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மன்னர் தர்பார் நடத்த உள்ளார். இதற்காக அவர் அமரும் தங்க, வைர நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.

    அந்த சிம்மாசனம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் சிம்மாசனத்திற்கு என்று பண்டைய வரலாறும், புனிதத்தன்மையும் உண்டு. சிம்மாசனத்தை பார்ப்பதையே அக்காலத்தில் மக்கள் பெரும் பாக்கியமாக கருதியதாக கூறப்படுகிறது. இந்த சிம்மாசனம் முதலில் பாண்டவர்கள் வசம் இருந்துள்ளது. அதன்பிறகு மண்ணில் புதைந்திருந்த இந்த சிம்மாசனத்தை விஜயநகர பேரரசு காலத்தில் மன்னர் வித்யாரண்யரால் கண்டறியப்பட்டு உள்ளது. விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பின் இந்த சிம்மாசனம் மீண்டும் மண்ணில் புதையுண்டது. மேலும் சிம்மாசனம் புதைந்திருந்த இடம் மண் குவியலாக இருந்தது.

    பின்னர் 1610-ம் ஆண்டு விஜயநகர அரசர் ரங்கராயர் இந்த சிம்மாசனத்தை கண்டெடுத்தார். அவர் இந்த சிம்மாசனத்தை அப்போதைய மைசூரு மன்னர்களுக்கு பரிசாக வழங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் வசம் இந்த சிம்மாசனம் இருந்தது. ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தவில்லை.

    திப்பு சுல்தானின் மறைவிற்கு பிறகு இந்த சிம்மாசனம் யது வம்சத்திடம் வந்தது. அதில் முதன்முதலாக மும்மடி கிருஷ்ணராஜ உடையார் இந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்து முடிசூடிக் கொண்டார். அதன்பிறகு வந்த யது வம்ச மன்னர்கள் அனைவரும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தனர். மேலும் கடந்த 1940-ம் ஆண்டு வரை இந்த சிம்மாசனத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன.

    இந்த சிம்மாசனம் அத்தி மரத்தால் செய்யப்பட்டது. அதன்மீது வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த சிம்மாசனத்தை 3 பிரிவுகளாக பிரித்துள்ளனர். முதலில் படிகள், இரண்டாவது அரசன் இருக்கை, மூன்றாவது அரசன் குடை என்று குறிப்பிடுகிறார்கள். அரசன் இருக்கை கூர்மாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள மிருதுவான பஞ்சு மற்றும் தலையணைகள் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட துணிகளால் ஆனது.

    அரசன் இருக்கைக்கு செல்லும் படிகளின் எண்ணிக்கை 7 ஆகும். இந்த படிகளில் தர்ம, அர்த்த, காம மோட்சங்களைக் குறிக்கும் வகையில் 4 சக்கரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. படிகளின் இருபுறமும் சலபஞ்சிகே எனப்படும் பெண் பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இருக்கையின் பின்புறத்தில் பறவைகள், சிங்கம் மற்று பூக்களின் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடுவில் சாமுண்டீஸ்வரி தேவியும், இருபுறமும் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியும் உள்ளனர். 8 திசைகளின் கடவுள்கள் என்று அழைக்கப்படும் அஷ்ட திக்பாலகர்களால் இந்த சிம்மாசனம் சூழப்பட்டுள்ளது.

    அரசன் இருக்கையை குதிரைகள் குதிக்கும் தோரணையில் தாங்கி நிற்கின்றன. அரசன் இருக்கையின் தெற்கில் பிரம்மாவும், வடக்கில் சிவனும், நடுவில் விஷ்ணும் அலங்கரிக்கின்றனர்.

    மன்னர் பெற்ற வெற்றியின் அடையாளங்களாக சிங்கங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இருக்கையின் 3 விளிம்புகளில் 2 குதிரைகள், 2 புலிகள், 4 நாரைகள் அழகுடன் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மாசனம் பின்புறம் அரச சின்னமான கந்தபெருண்டா செதுக்கப்பட்டு உள்ளது. அதன்கீழ் 'சத்யமேவூதரகம்' என்ற மேற்கொள் இருக்கிறது. 'சத்யமேவூதரகம்' என்பதற்கு 'நான் எப்போதும் உண்மையை நிலை நிறுத்துவேன்' என்று பொருளாகும்.

    சிம்மாசனம் மொத்தம் 2.25 மீட்டர் உயரம் கொண்டது. அரசன் இருக்கை மீது குடை அமைக்கப்பட்டு உள்ளது. அது முழு அரச இருக்கைக்கும் நிழல் தருகிறது. அந்த குடையின் மீது மன்னரை ஆசீர்வதிக்கும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

    'ஹுமா' என்ற ஒரு வகை வானப்பறவையின் நிழல் யார் மீது விழுகிறதோ அவர்கள் எப்போதும் அரச கிரீடத்தை அணிவார்கள் என்று நம்பப்படுகிறது. அதுபோல் இந்த குடை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த சிம்மாசனம் தொடர்பாக சில கல்வெட்டுகளும் உள்ளன. அந்த கல்வெட்டுகளில், 'பூமியின் இறைவன்', 'சாமுண்டீஸ்வரி தேவியின் ஆசீர்வாதத்தால் பிரகாசிக்கும் சாமராஜாவின் மகன்' என்று கிருஷ்ணராஜ உடையாரை குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் 'நீ கர்நாடக ரத்ன சிம்மாசனத்தின் இறைவன், உன்னுடைய உன்னதமான முன்னோர்களிடம் இருந்து நீங்கள் பெற்ற தங்க சிம்மாசனத்தின் தங்க குடை, உலகம் முழுவதும் பிரமிப்பை தூண்டுகிறது' என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சிம்மாசனத்தில் தோராயமாக 280 கிலோ தங்கம் மற்றும் வைரம், நவ ரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிம்மாசனத்தின் 8 பாகங்களையும் சலபஞ்சிகா, சக்கரங்கள், குதிக்கும் குதிரைகள், குஷன் கொண்ட அரச இருக்கை, தலையணைகள், கந்தபெருண்டா உள்பட 8 பெயர்களில் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

    • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது.
    • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    மைசூரு தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 14 யானைகளுக்கும் பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை அபிமன்யு என்ற யானை சுமக்க உள்ளது.

    இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது. மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் இருந்து அம்மன் சிலை எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தி விசேஷ பூஜை செய்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    அப்போது அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியா, கோவில் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு ஆகியோர் இருந்தனர். தசரா விழா தொடக்க நாளான 26-ந்தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அலங்கரித்து நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    விஜயதசமி நாளன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக கோவிலில் இருந்து அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×