search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton"

    • கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
    • விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வின்சிட்டி நகரில் , சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் உத்தரவுப்படி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த பணிகளை பார்வையிட வந்த கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் நடராஜன் மற்றும் மேலாளர் சதீஷ் ஆகியோர் கூறுகையில்:-

    கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏல நடவடிக்கையில் வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொள்வதால், விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையினை விட கூடுதலான விலை கிடைக்கிறது.

    மேலும் பருத்திக்கு உரிய விற்பனை தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் சங்கம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான சீர்காழி வட்ட பருத்தி விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் தற்போது வரை ரூ1 கோடியே 31 லட்சம் அளவிற்கு பருத்தி ஏலப்பணியினை மேற்கொண்டு, பருத்தி விவசாயிகளின் பொரு ளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது என்றனர்.

    • சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.
    • இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் ஏலம் நடந்து வருவது வழக் கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப் பட்டி, புதுச்சத்திரம், மசக் காளிப்பட்டி, குட்டலாடம் பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம் பாளையம், அனைப்பாளை யம், வடுகம், குள்ளப்ப நாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.அதேபோல் ராசிபுரம், ஆத்தூர்,ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச் ரக பருத்தி 960 மூட் டைகளும், சுரபி ரக பருத்தி 67 மூட்டை களும், கொட்டு ரக பருத்தி 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 689 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண் டால் ரூ. 6 ஆயிரத்து 789-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ. 6 ஆயிரத்து 500-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 100-க்கும், கொட்டு ரக பருத்தி1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயி ரத்து 200 முதல் அதிக பட்ச மாக 1 குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 800-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    • சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
    • தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

    பருத்தி விதைகளை பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் வாங்கி சாகுபடி செய்திருந்தனர்.

    இந்நிலையில் தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்த வயல்களுக்கு சென்று பருத்தி விதை வழங்கிய தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் வேப்ப பட்டை பருத்தி ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஆனந்தராஜ், விதை ஆய்வு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்திச் செடிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பருத்தி விதைகள் தரம் குறித்தும் அதிகாரிடம் விளக்கம் கேட்டனர்.

    ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், கோபுரராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னோடி விவசாயி நத்தம் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    நம் நாட்டின் பருத்திச்சந்தையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இந்திய பருத்திக்கழகம் கண்காணித்து வழிநடத்துகிறது.நடப்பு பருத்தி சீசனான 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேல் என்பது 170 கிலோ. நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வால் நடப்பு சீசன் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கியது. கடந்த 2022 அக்டோபரில் 9.71 லட்சம் பேல், நவம்பரில் 27.03 லட்சம், டிசம்பரில் 27.96 லட்சம், 2023 ஜனவரியில் 26.66 லட்சம், பிப்ரவரியில் 33.77 லட்சம், மார்சில் 30.07 லட்சம், ஏப்ரலில் 29.54 லட்சம், மே மாதத்தில் 25.96 லட்சம், ஜூனில் 13.63 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது.இதுவரை 224.37 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விற்பனைக்கு வந்துள்ளது.

    தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனான டாஸ்மா தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், நடப்பு பருத்தி சீசனில் பருத்தி வரத்து தாமதமாக துவங்கியது. தற்போது இரண்டாம் அறுவடை நடந்து வருவதால் சீசன் நிறைவடையும் நிலையிலும் வரத்து தொடர்கிறது.தற்போதைய நிலவரப்படி தினமும் 35 ஆயிரம் பேல் வருகிறது. பஞ்சு ஒரு கேண்டி எனும் 356 கிலோ 55 ஆயிரம் முதல் 56 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார்.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது.

    அரியலூர் :

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர்.

    இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 889-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 509-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 648.46 குவிண்டால் பருத்தி 280 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.41 லட்சத்து 13 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலர வைத்து வருகிற புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.

    • சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும்.
    • இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கின் வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் நடராஜன், சிவபழனி ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த ஏலத்தில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும், பருத்திக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது
    • வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது. மேற்படி ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும், இந்திய பருத்தி கழகத்தாரும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் பருத்தியினை தூசி மற்றும் அயல் பொருட்கள் கலப்பின்றி நன்கு உலர வைத்து தரம் பிரித்து விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

    விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கு உரிய தொகை அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களை 04331-296224 என்ற தொலைபேசி எண்ணிலும், 9655180343, 9842452150 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண் துணை இயக்குனர் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
    • குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது.

    திருவாரூர்:

    திருவாரூர் நாகை சாலையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    கடந்த வாரம் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய முடிவு எட்டப்பட்டது.

    இந்நிலையில் 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நேற்று செவ்வாய்கிழமை ஏலத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவு கூடுதல் விலை கிடைக்காமல் குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில் ஏலம் முடிந்த பின்னர் மீதமுள்ள பருத்தி மூட்டைகள், அடுத்த ஏலத்திற்காக உள்ள பருத்தி மூட்டைகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மாலையில் திடீரென பெய்த கனமழையால் 2000 பருத்தி மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

    ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
    • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    திருவாரூர்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

    திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

    அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.
    • ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

    பாபநாசம்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் தங்களது பருத்தியினன விற்பனறக்கூ டத்திற்குனை கொண்டு வந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் மொத்தம் 10 வணிகர்கள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    விற்பனைக்குழு செயலாளர் சரசு, விவசாயி களிடம் பருத்தியினை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேட்டுக் கொண்டார்.

    இம்மறைமுக ஏலத்தில் 65 மெ.டன் அளவுள்ள ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி யானது வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,769 , குறைந்தபட்சமாக. ரூ.5,329, சராசரியாக ரூ.6,189-க்கும் விலை போனது.

    மேலும் இம்மறைமுக ஏலத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி , விளம்பரம் மற்றும் பிரசார சித்தார்த்தன், அன்பரசு உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,589 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 5,800 முதல் ரூ. 7,469 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,700. கடந்த வார சராசரி விலை ரூ. 6,900. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.72 கோடி.ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
    • பருத்தியில் நோய் தாக்குவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.

    அவ்வாறு பயிரடப்பட்டுள்ள பருத்தியில் தற்போது இலை சிவந்து, காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநர் கருணாகரன் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் குடவாசல் வட்டாரத்தில் ஒரு விவசாயியின் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ×