search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்
    X

    1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்

    • சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும்.
    • இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கின் வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் நடராஜன், சிவபழனி ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த ஏலத்தில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும், பருத்திக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×