search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை கூடம்"

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • பருத்திகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலத்தில் தங்களது பருத்திப்பஞ்சுகளை விற்பனை செய்ய ஏராளமான விவசாயிகள் சரக்கு வாகனங்களில் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து குவித்ததால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்பட்டது.

    கொட்டையூரில் தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது.

    இந்த விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த பருத்தி ஏலத்தில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட பஞ்சுகளை கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்ட பருத்தி பஞ்சுகளை அறுவடை செய்து ஏராளமான சரக்கு வாகனங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் ஏராளமான விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த பருத்திகளை சரக்கு வாகனங்களிலேயே வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பருத்திப்பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனால் விவசாயிகள் கலக்கமடைந்தனர். பருத்தி மூட்டைகளை கையாள அதிகப்படியான பணியாளர்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணியில் ஈடுபடுத்தி விரைவாகவும் பாதுகாப்பாகவும் பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்கவும் பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
    • குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது.

    திருவாரூர்:

    திருவாரூர் நாகை சாலையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    கடந்த வாரம் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய முடிவு எட்டப்பட்டது.

    இந்நிலையில் 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நேற்று செவ்வாய்கிழமை ஏலத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவு கூடுதல் விலை கிடைக்காமல் குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில் ஏலம் முடிந்த பின்னர் மீதமுள்ள பருத்தி மூட்டைகள், அடுத்த ஏலத்திற்காக உள்ள பருத்தி மூட்டைகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மாலையில் திடீரென பெய்த கனமழையால் 2000 பருத்தி மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

    ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழு வில் 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

    விருதுநகர், ராஜ பாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்க ளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்கள், பரி வர்த்தனை செய்ய பரிவர்த் தனை கூடங்கள், ஏல நட வடிக்கை மேற்கொள்ள தேவையான ஏலக் கொட்டகைகள் மற்றும் சிறுதானிய விளை பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பய ன்படுத்திக்கொள்ளலாம்.

    2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறி விக்கப்பட்டு, கொண்டா டப்பட்டு வருவதால் விவ சாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து அறுவடை செய்த மக்காச்சோளம்,கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறு தானி யங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளை யும் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், காந்தி பூங்கா, கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெறுகிறது.
    • தூய்மை பணியாளர்கள் சென்று அந்த இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24 வார்டுகளிலும், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடற்கரை பூங்கா, காந்தி பூங்கா கோவில் மற்றும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூய்மை பணி நடைபெறுகிறது.

    இதன்படி நீண்ட நாட்களாக மீன் விற்பனை நிலையத்தில் புல், மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் புகழேந்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    உடன் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், துணை தலைவர் மங்களநாயகி ,வார்டு உறுப்பினர் மயில்வாகனம்மற்றும் தூய்மை பணியாளர்கள் 30 பேருடன் நகரமன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி சுமார் ஒருடன் குப்பைகள் அகற்றபட்டது.பின்பு அப்பகுதிக்கு பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    ×