search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி செடியின் தரம் குறித்து ஆய்வு
    X

    பருத்தி செடியின் தரம் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பருத்தி செடியின் தரம் குறித்து ஆய்வு

    • சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
    • தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

    பருத்தி விதைகளை பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் வாங்கி சாகுபடி செய்திருந்தனர்.

    இந்நிலையில் தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்த வயல்களுக்கு சென்று பருத்தி விதை வழங்கிய தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் வேப்ப பட்டை பருத்தி ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஆனந்தராஜ், விதை ஆய்வு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்திச் செடிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பருத்தி விதைகள் தரம் குறித்தும் அதிகாரிடம் விளக்கம் கேட்டனர்.

    ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், கோபுரராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னோடி விவசாயி நத்தம் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×