search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condemnation"

    • ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
    • தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார் கோயில் ஒன்றியம், ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும், தமிழ்நாட்டு மக்களையும், மரபுகளையும் மதிக்காத, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரின் நடவடிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    • புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செய்லாளர் (ஒ.பி.எஸ். பிரிவு) ஒம்.சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.இதனை புரிந்து கொள்ளாத புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    முதலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையில் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இப்போது புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்று இரட்டை நிலையை பின்பற்றுகிறது.

    ஆனால் அ.தி.மு.க. எப்போதும் புதிய கல்வி கொள்கையில் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை மாநில தி.மு.க. அமைப்பாளர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கொள்கையால் வட மாநிலத்தவர் புதுவையை ஆக்கிரமிக்கும் சூழல் நிலவும் என்று கூறியுள்ளார்.

    புதுவை மாநிலத்தில் வட மாநிலத்தவரை உள்ளே அனுமதிக்க முழுமுதல் காரணமாக இருந்தது இவரது ஆதரவில் அமைந்த கடந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். மேல்நிலைப் பள்ளிகளில் முதல்வர் பதவி உள்ளிட்ட குரூப் பி பணியிடங்களில் 20 சதவீதம் வடநாட்டவருக்கு வழங்கலாம் என்ற அனுமதி வழங்கியது தி.மு.க. ஆதரவு பெற்ற கடந்த காங்கிரஸ் அரசாங்கம் தான்.

    இவை அனைத்தையும் மறந்து விட்டு தனக்கு வசதியாக எப்போதும் போல பொய் மூட்டைகளை அறிக்கையாக தி.மு.க. மாநில அமைப்பாளர் வெளியிட்டுள்ளார். எனவே இது போன்ற செயல்களை நிறுத்தி மக்கள் பணியில் ஈடுபட புதுவை எதிர்கட்சி தலைவரை புதுவை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
    • எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடந்தது. இைதயொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சரவணபகவான்,சத்யன், ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ரசு உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அண்மையில் மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மதுரை மக்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சம்பந்தமாக தவறான தகவலை ெதரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ததாகவும் அதற்கு தமிழக அரசு தாமதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.

    ஆரம்பத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த அளவு இடம் போதும் என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது அதிக இடம் வேண்டும் என்று கூறி அண்டர் பாஸ்ட் திட்டம் கைவிடப்பட்டது என திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது.

    இதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதுவும் தவறான தகவல். இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறினால் தவறாக திரித்து கூறுவதாக சொல்கின்றனர்.

    அண்மையில் தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டு வேன் என்று கூறியதாகவும், அவருக்கு கல்லறை அமைத்தது தி.மு.க. தான் என்றும் கூறி உள்ளார்.

    காமராஜர் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை எப்போதும் பேசியது கிடையாது. இன்றளவும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர். அவரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, பிரதமர் மன்மோகன் சிங்கின் வயதை (80) நோக்கி போகிறது" என்று பா.ஜ.க. கிண்டல் செய்தது.

    நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது ரூபாய் மதிப்பு (58). அதாவது பிரதமர் மோடியின் வயதை விட (64) குறைவாகத்தான் இருந்தது. இன்றைக்கு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, பிரதமரின் அண்ணன் சோம்பாய் மோடியின் வயதை (80) தொடும் நிலையில் உள்ளது.

    நீங்கள் இந்திய பொருளாதாரம் வளரும் என்று சொன்னது, டாலர் வளர்ச்சியைத்தானா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னை மதியழகன், குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர். சிவசங்கரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், பாண்டித்துரை, ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சிவாஜி சமூக பேரவைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கக்கரை சுகுமாறன், ஒரத்தநாடு நகரத்தலைவர் சுப்பு தங்கராஜூ, கண்ணுக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைத்தியநாதன், மனோகரன், சிவாஜி, சம்பத் வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் ஜெயசூரியன், ஜீவா, விநாயகம், ராமலிங்கம், அப்பாத்துரை, ஆடிட்டர் விஸ்வநாதன், மீனாட்சி சுந்தரம், பெருமகளுர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது .

    பல்லடம்:

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (வயது 57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது .கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ந் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரும் ஜூன்-21ல் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் கூறியதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கயில் அரங்கேறிய நூதன நகை திருட்டு சம்பந்தமாக கடந்த மாதம் மே மாதம் 20 ந்தேதியன்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் பல்லடம் தாசில்தார் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை அடகு வைத்த நகைகளில் எடை குறைவாக உள்ளதாக புகார் அளித்துள்ள 557 வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் மட்டுமின்றி நகைகளை பணம் செலுத்தி திருப்பி எடுத்த பின் நூதன திருட்டு நடைபெற்றதாக புகார் அளித்து இருக்கும் 84 வாடிக்கையாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் . கடந்த மூன்று மாதங்களாக இந்த பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததால் நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு போடப்பட்டுள்ள வட்டி பணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் வங்கி தரப்பிற்கு ஒரு மாத காலம் விவசாயிகள் தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாளை 20-ந்தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நகைக்கான சரியான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.இனி அடகு வைத்த நகைகளை திருப்பி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நகையின் தரத்தை உறுதி படுத்தி கொடுக்க வேண்டும் .இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது . ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்காத பட்சத்தில் நாளை 20 ந்தேதி முதல் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் விவசாயிகளும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளித்த ஒரு மாத கால அவகாசம் முடியும் நிலையில் வங்கித் தரப்பில் முறையான இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து நாளை மறுநாள் 21-ந்தேதி கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பாடம் கற்பிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu #PulwamaAttack
    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரவேண்டும்.

    உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதற்குரிய பலனை திருப்பித்தர வேண்டும். பயங்கரவாதிகள் நம்மை பயமுறுத்தவும், நமது துணிச்சலை குறைக்கவும் விரும்புகிறார்கள். எனவே நாம் துவண்டுவிடவும் கூடாது, பலமிழந்துவிடவும் கூடாது.

    அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே நாம் திருப்பித்தர வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான செயலை அவர்கள் மீண்டும் செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கும் வகையில் இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியா முதலில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது.

    உலக நாடுகளின் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ஆனால் அது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தங்கள் நாட்டின் மந்திரி உள்பட 3 பேர் மீது தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #NorthKorea
    பியாங்காங்:

    எதிர் எதிர் துருவங்களாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என்ற உறுதிமொழியை டிரம்புக்கு கிம் ஜாங் அன் கொடுத்தார். அதன்படி வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

    எனினும் தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது வரும் என்றும் வடகொரியா எச்சரிகை விடுத்தது. மேலும் கடந்த மாதம் அதிநவீன அணு ஆயுத சோதனையை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

    இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிரம்ப் உறுதி செய்தபோதும், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

    இந்த நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மிக நெருக்கமானவர் மற்றும் ஒரு மந்திரி உள்பட வடகொரியாவை சேர்ந்த 3 பேர் மீது அமெரிக்கா திடீரென தடைகளை விதித்துள்ளது.

    அமெரிக்க செனட் சபையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், கிம் ஜாங் அன்னின் வலதுகரமாக செயல்படும் சோ ரியோங் ஹே, வடகொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோங் கியோங் தாயிக் மற்றும் பிரசார அதிகாரி பாக் குவாங்ஹோ ஆகிய 3 பேரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.என்.சி. ஏ.வில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வடகொரியா உடனான உறவை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறையோ, இரு நாட்டு உறவை, கடந்த ஆண்டு இருந்ததை போல கடுஞ்சொற்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவது போல தலைகீழாக நிற்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிட செய்யும்.

    வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்கிற அமெரிக்காவின் எண்ணம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #NorthKorea 
    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #TNPSC #MKStalin
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    வேலை வாய்ப்பு தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாக கட்டளை பிறப்பித்து இருக்கிறது. அந்த அரசியல் சட்ட கடமையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    மாநில, சார்நிலை மற்றும் அமைச்சு பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டி தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் குரூப்-1 பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.

    இரவு பகலாக படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கருணாநிதி உலகப்புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டி தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

    நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்ட கடமையில் இருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×