search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
    • தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார் கோயில் ஒன்றியம், ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும், தமிழ்நாட்டு மக்களையும், மரபுகளையும் மதிக்காத, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரின் நடவடிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    Next Story
    ×