search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித்தேர்வு"

    • பயிற்சியாளர் ராஜகோபாலின் பணி சிறக்க போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நூலகர்கள், தேர்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மாவட்டமைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஆங்கில புலமை மற்றும் பொது அறிவு வகுப்புகளை போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்தி வரும் பணி நிறைவு செய்த இ.எஸ்.ஐ. மேலாளர் ராஜகோபால் 203 - வது வகுப்பினை நிறைவு செய்தார். பொது நல எண்ணத்துடன் பட்டதாரிகள் போட்டித்தேர்வை எதிர் கொள்ளும் வகையில் தயார்படுத்தி வரும் பயிற்சியாளர் பணி சிறக்க பொது நூலகத்துறை மற்றும் போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், பாலசுப்பிர மணியன், நூலக பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, தென்காசி மாவட்ட நூலக அலுவலக இளநிலை உதவியாளர் வினோத் மற்றும் போட்டித்தேர்விற்கு பயின்று வரும் தேர்வர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சியாளரை பாராட்டினர்.

    • மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
    • விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 18.11.2023 பிற்பகல் 5 மணிக்குள் ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 7வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638011, தொலைபேசி எண்: 0424-2221912 மின்னஞசல் முகவரி: adferode2@gmail.com என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
    • போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். மாதிரி தேர்வுகளை அதிகம் எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் 7-வது மாடியில் அறை எண்.713-ல் செயல்படும் நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். இங்கு தினமும் 60 பேர் புத்தகங்களை தேர்வு செய்து படித்து தயாராகி வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர், தான் தினமும் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு சென்று போட்டித்தேர்வுக்கு தயாரான அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்தார்.

    போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தேவையானவற்றை தெரிவித்தால் செய்து கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உடனிருந்தார்.

    • விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு, பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
    • வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-

    உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.

    எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.
    • வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-

    உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.

    எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இணைய வழிமுறையில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 470 தேர்கள்எழுதுகிறார்கள்.
    • தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நாளை (சனிக்கிழமை) நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 470 பேர் எழுதுகிறார்கள்.

    இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறி வகை போட்டிதேர்வு நாளை (சனிக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரண்டு நேரங்களில் 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இணைய வழிமுறையில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 470 ேர்வர்கள்எழுதுகிறார்கள்.

    இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

    தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் கடைசி நேரம் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

    இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடை பிடிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வு களுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-24-ம் ஆண்டிற்கான ஆண்டில் குரூப்-1, குரூப்-4, குரூப்-2 போன்ற பல்வேறு பணிக்காலியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டித்தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்க ளை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க https://forms.gle/QuWrLhx6tKZVP4C69 என்ற Google Form பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • தொலைபேசி எண் 04567-230160ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான பணியாளர் தேர்வாணையம் (SSC), ெரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.
    • விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.

    வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி) 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 7 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 3-ந்தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்விற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் சான்று விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மாதம் 28-ந்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் அல்லது https://forms.gle/YA2vYJ1AFjUYAd7 என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரையில் இன்று முதல் தொடங்குகிறது
    • இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ள SSC CHSL போட்டித்தேர்விற்கு தோராயமாக 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலை படிப்பு (பிளஸ்-2) முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட போட்டித்தேர்வாளர்கள் இந்த பணியிடத்திற்கு ssc.nic.in என்ற இணையதசத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.

    மேலும் இந்த போட்டி தேர்வு உத்தேசமாக வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த வல்லுநர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்து கின்றனர்.

    மேற்கண்ட போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டித்தேர்வாளர்கள் விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • விருதுநகரில் 26-ந் தேதி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC - CGL Group – B மற்றும் Group – C ) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (04562-293613) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • 1261 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • திருப்பூர் மாவட்டத்தி 17,780 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுப்பள்ளியில் பயிலும் 1261 மாணவ, மாணவிகளுக்கு ரூ.63,77,474 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது :- திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 17,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் போது மிகுந்த வலிமையுடன் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தவறான முடிவுகளுக்கு செல்லக்கூடாது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியும் வளர்த்துக் கொண்டு போட்டித்தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×