search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Meeting"

    • கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
    • ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் வானூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே.ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட 43 பூத்துகளில் உடனடியாக கமிட்டி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

    வானூர் தொகுதியில் பா.ஜனதா வளர்ந்து வரும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் வந்து இணையும் உறுப்பினர்களுக்கு சரியான பதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி, மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன், முருகன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்த வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்துவது.

    கோத்தகிரி அரசு சித்தா பிரிவில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி, ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள் விபின் குமார், சுரேஷ், லலிதா, சங்கீதா, திரைசா, ரோஸ்லின், ராதிகா, பியூலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.

    • ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் வீரசைவ லிங்காயத்தார் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களின் சமுதாய முன்னேற்றத்திற்க்கு நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து முன்னேற்ற சங்கம் அமைத்து பல நலத்திட்டங்கள் சமுதாயம் சார்ந்த மற்றும் சமுதாய அல்லாத மக்களுக்கும் செய்து வருகின்றனர். இதில் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக பொறுப்பாளர்களை நியமித்து செயல்படுத்தி வரும் தங்களின் குலதெய்வமான ஸ்ரீமகாலிங்கசுவாமி கோவிலில் பொதுகுழுவை கூட்டி வரும் 3 ஆண்டுகளு க்கு தலைவறாக தூனேரி ஆசிரியர் போஜன் கொணவ க்கரை மணி செயலா ளறாகவும் கதுகதொ ரை லிங்கராஜ் பொரு ளாளறாகம் தேர்ந்தெடு க்க பட்டனர். மு ன்னாள் செயலாளர் விஸ்வ நாதன் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.இதில் அனைத்து ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் மாவட்ட கிளை செ யற்குழு கூட்டம் சேர்மன் சுந்தரம் தலைமையில் நடந்தது. புரவலர்கள் ராமநாதன், உலகராஜ், துணை சேர்மன் ஜெயக்குமார், ராமேசுவரம் கிளை சேர்மன் பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷாலினி பில்லி கிரஹாம், செய்யது முகமது ஹசன், கோபால், ரினி, பவதாரணி, கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், மாவட்ட கன்வீனர்கள் அலெக்ஸ், பாலமுருகன், முதலுதவி பயிற்சிகள்-பேரிடர் கால பயிற்சிகள் குறித்து சொக்கநாதன், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து கலெக்டரிடம் ஒப்படைத்தல் குறித்து பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் பேசினார்.

    வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் குணசேகரன் சமர்ப்பித்தார். புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து பேசப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதலுதவி, பேரிடர் காலங்களில் ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்ட ஆலோசகர் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், புரவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர். திரவிய சிங்கம், தமிழரசன், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
    • கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகர தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் செய்திருந்தார்.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், கே.ஏ. முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, பி.ரவி, ஏ.ரவி, நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, நகர துணை செயலாளர் இச்சுபாய், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், கார்த்திகேயன், தம்பி இஸ்மாயில், நகர பொருளாளர் அணில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு நாளை ஒட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

    எதிர்வரும் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பாக முகவர்கள் ஆலோசனை குறித்து தீர்மானிப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கவும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், ரகுபதி, விஷ்ணு பிரபு, ரமேஷ், கீதா, வனிதா, பிரியா, மேரி பிளோரினா, ஃப்ளோரினா புஷ்பராஜ், மீனா தியாகராஜன், அனிதா லட்சுமி மற்றும் கிளை செயலாளர்கள், தி.மு.க நிர்வாகிகள் ரவீந்திரன், மஞ்சு குமார், சுரேஷ், முத்துராமன், புஷ்பராஜ், ரமேஷ், எஸ். கே.ஸ்டான்லி, நவ்ஷாத், மோகன், ரவி, மேத்யூஸ், செல்வராஜ், மணிகண்டன், காந்தள் சம்பத், கே.ரவி, பாரதிராஜா, ராஜன், ஜெர்ரி, சந்திரசேகர், தாவீது ராஜா, என்.ராஜன், சசிகுமார், கே.சங்கர், முஜிபுர், ராஜா, ரவி, பாபு, வெங்கடேஷ், பெரியசாமி, வீரய்யா, ரமேஷ், ஆனந்த், சர்தார், திருஞானம், வில்லியம், அமலநாதன், சுரேஷ்குமார், சதாசிவம், ஸ்டீபன், ஏ.டி.சி ராஜன், பிரதாப், வரதன், முஸ்தபா, சீனிவாசன், நீல் ஆம்ஸ்ட்ராங், தியாகராஜன், ரங்கநாதன், ராஜ்குமார், சுப்பிரமணி, சத்யராஜ், மகளிர் அணியை சேர்ந்த லூயிசா, பிருந்தா, ஷோபா, பிரேமா, ஜாய்ஸ், நிர்மலா, சாந்தி, கீதா, ஜெய சக்தி, விமலா, ரெஜினா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது. 

    கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.

    காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது
    • மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

    பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்த ப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொட ர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசின் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்த ப்பட்டு வருகிறது என்ப தனை கண்காணித்து அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதே னும் குறைபாடுகள் இரு ப்பின் அரசு அலுவலர்கள் எனது கவனத்திற்கு உடனடி யாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நட வடிக்கைள் மேற்கொள்ள ப்படும். அதனைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    • ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விதைச்சான்றுதுறை, விதை ஆய்வுத்துறை, கால்நடை பராமரிப்புதுறை, பட்டுவளர்ச்சித் துறை மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களின் இலக்கு சாதனை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தினை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முறையாக செயல்படுத்திட வேண்டும். இத்திட்டதினை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதால் இதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திடவும், வடகிழக்கு பருவ மழையினால் பயிர் சேதம் ஆகாமல் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை அறிவுறுத்திடவும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இலக்கு சாதனை அடைந்திடும் வகையில் பணியாற்றிடவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • சத்திரக்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
    • நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.

    இதில் சத்திரக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் பேசுகையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் நெல் திட்டத்தில் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் மற்றும் நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் அனைத்து கிராம திட்டத்தில் தேர்வான அ. புத்தூர், போகலூர், எட்டிவயல், மற்றும் மென்னந்தி, நாகாச்சி விவசாயிகளுக்கு நெல் பயிரில் அடியுரமாக இடுவதற்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குநர் நிரேஷ் குமார் பேசுகையில், குழித்தட்டு, மிளகாய் நாற்றங்கால், நுண்ணீர் பாசனம் அமைத்தல் போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் தமிழ்ச்செல்வி பேசுகையில், மாட்டு தீவன பயிர்கள் மற்றும் கால்நடை தீவனங்களான சுபாபுல், அகத்தி, சாகுபடி பற்றி எடுத்துக் கூறினார். கால்நடைகளுக்கு அரிசி மாவு சாதம் உணவாக கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கூறினார்.

    வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர் அருண்ராஜ், நெல் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி கூறினார்.

    பாண்டிக்கண்மாய் முன்னோடி விவசாயி ஜீவானந்தம், கீழக்கோட்டை முன்னோடி விவசாயி இளங்கோவன், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், அட்மா திட்ட மேலாளர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
    • கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.

    உறுப்பினர் செயலர்- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்கா ணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட ங்களான தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம்- பேரூராட்சிகள், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல்படுத்த ப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

    மேலும் மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு தேவை யான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

    • சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகநாதன் முன்னிலை வைத்தார்.

    இந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இடை நின்றல் கண்காணிப்பு குழு தலை வராக சவுடம்மாள், கற்றல் மேம்பாட்டு குழு தலைவராக சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவராக சம்ஷாத் பானு, பள்ளி கட்டமைப்பு குழு தலைவராக நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.

    ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியில் உள்ள கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகள் பழுது பார்த்தல், சத்துணவு மையங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வழங்குதல், சத்துணவு கூட்டத்துக்கு என்று தனியாக தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் நகல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

    ×