search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Meeting"

    • பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.
    • போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது இதில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மோகனா, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்விக் குழு கூட்டம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆணையாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதில், கல்வி வளர்ச்சி, பள்ளி கட்டிட பராமரிப்பு, உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்க்கரசி கனகராஜ் பேசுகையில். கோடங்கிபாளையம் மற்றும் பருவாய் கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.மேலும் பள்ளிகளின் அருகாமையில் அரசு தடை செய்துள்ள பாக்கு உள்ளிட்ட போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை காவல்துறை மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பொது நோக்கங்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அருள்புரம், புளியம்பட்டி ஆகிய சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், நாய்கள் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படுவதால், சுற்றுச்சுவர்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல நோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரில் குளோரின் மருந்து கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், பல்லடம் துணை தாசில்தார் பானுமதி, மின்வாரிய உதவிப் பொறியாளர் தங்கராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பாபு,ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாலகுமார், செயலாளர் மோகன்ராஜ், பயிற்சி தலைவர் அமரீத், சத்யநாராயணன், விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு கூட்டத்துக்கு புதுவை பா.ஜனதா மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஆனந்தன், மாநில விவசாயி தலைவர் புகழேந்தி, பயிற்சி அணி தலைவர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், மாவட்ட விவசாயி தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் பேசினார்கள்.

    மதகடிப்பட்டு வார சந்தை தரம் உயர்த்தப்பட்டது, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கியது, திருபுவனை தொகுதியில் புதிய சாலை அமைத்து வருவது, புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் அணி செயலாளர் விக்ரம் நன்றி கூறினார்.

    • புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது.
    • புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி புதுவை தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழர்கள் அனைவரும் வியக்கும் வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, புதுவை அரசு நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

    புதுவை அரசு அறிவித்துள்ள தமிழ் சிறகம் அமைப்பது என்பதனை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கி தமிழின் மேன்மையை மேலும் உயர்த்திட வழிவகை காண வேண்டும்.

    புதுவையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், ஆட்சி பரப்பு மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தெரிவித்தார்.

    • ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியதாவது:- காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலைகள் ஊராட்சி வசமே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்கி அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களான செல்வம் ராமசாமி, தாபினி மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, ஐயனார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றிய, நகர, முத்தூர் பேரூர் கழக தி.மு.க. செயற்குழு கூட்டம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும்ஆலோசி க்கப்பட்டது.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன்,நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர்செயலாளர் செண்பகம் பாலு மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணை ப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
    • இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    திருப்பூர்

    தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட காங்கயம் தொகுதி பொறுப்பாளர் உமாராணி, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் சித்–திக், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை வரும் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொண்டர்கள் தங்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு செய்ததற்கு விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்படும் என்று அறி–வித்த முதல்-அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது.
    • பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

    கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், சடடமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செல்வராஜ், மணி, அன்வர்கான், மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகவும், எழுச்சியோடும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் வீடுதோறும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கிளை, வட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பாகங்களுக்கு உடனடியாக பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை,

    கைத்தறித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன.

    2023-24-ம் நிதிஆண்டிற்கான கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கான கடன் இலக்கு ரூ.8814.95 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.5465.26 கோடி, பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு ரூ.1596.48 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

    விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறுதொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவி க்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம்,

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களு க்கான வேலை வாய்ப்பு உறுவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறை படுத்தும் திட்டம் ஆகிய சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இத்திட்ட ங்களின் மூலம் சிறப்பான சேவைகள் வழங்கிய சிறந்த வங்கிகள் மற்றும் சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் 2022-2023-ம் ஆண்டிற்கான விருது களையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    மேற்காணும் 4 திட்டங்கள் மூலமாக 326 நபர்களுக்குரூ.58.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது.
    • மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • புதிய நிர்வாகிகள் அறிமுகம், எதிர்காலத் திட்டம் பற்றிய கூட்டம் நடைபெற்றது.
    • நகர பூத்,கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினார்.

    உடுமலை :

    உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மீனாட்சி மஹாலில்செயற்குழுக் கூட்டம், ஆய்வறிக்கை,கிளை,பூத் பொறுப்பாளர்கள் அறிமுகம், புதிய நிர்வாகிகள் அறிமுகம், எதிர்காலத் திட்டம் பற்றிய கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமை தாங்கினார்.நகர பொது செயலாளர் சீனிவாசன் தம்பிதுரை வரவேற்றார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, விஜயராகவன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி ,திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி உடுமலை நகர பூத் தலைவர்கள் மற்றும் நகர பூத்,கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கார்த்திகா,உடுமலை நகர மகளிர் அணி தலைவர் ராதிகா,மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பாலகுரு, மாவட்ட பட்டியல் அணி தலைவர் சித்தார்த்தன், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், பாப்புலர் ரவி, விளையாட்டுத்துறை மாவட்ட தலைவர் பாப்புலர் ஜெயராஜ், சிறுபான்மையினர் மாவட்டத் தலைவர் பால்ராஜ்,ஷேக் அப்துல்லா, மாவட்ட செயலாளர் கலா,இளைஞர் அணி நகர தலைவர் தினேஷ்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு உடுமலை நகர தலைவர் ரஜினி பிரசாந்த், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

    • பாரதீய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது.
    • மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

     புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சண்முகம், பூங்குன்றனார், ரேணுகாதேவி, தொகுதி பொதுச் செயலாளர் மூர்த்தி, சுனிதா தேவி ஆகியோர் வரவேற்றனர்.

    தொகுதி பொறுப்பாளர் ரிசார்ட் ஜான் குமார் எம்.எல்.ஏ. நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநிலச் செயலாளர் மற்றும் நகர, மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள். மாநில விவசாய அணி தலைவர் புகேழந்தி கேந்திர பொருப்பாளரிடம் விசாரணை நடத்தினார். 

    முடிவில் நகர மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா ளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    ×