search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை குழு"

    • சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகநாதன் முன்னிலை வைத்தார்.

    இந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இடை நின்றல் கண்காணிப்பு குழு தலை வராக சவுடம்மாள், கற்றல் மேம்பாட்டு குழு தலைவராக சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவராக சம்ஷாத் பானு, பள்ளி கட்டமைப்பு குழு தலைவராக நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.

    ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியில் உள்ள கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகள் பழுது பார்த்தல், சத்துணவு மையங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வழங்குதல், சத்துணவு கூட்டத்துக்கு என்று தனியாக தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் நகல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

    • தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம்கல்வித்துறை சார்பாக உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாணவர்கள் - பெற்றோர்கள் மூலமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சமூக சேவகர் ஜெ.ஷாஜாதிபர்வீன், உடுமலை நகர மன்ற 12 வது வார்டு உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்டது . இதையடுத்து திருப்பூர் மாவட்ட கல்வி துறை அதிகாரி கு.பழனிச்சாமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
    • அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் , பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துலட்சுமி, முன்னாள் ஆசிரியர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி மன்றத் தலைவர் ஊரின் அனைத்து பகுதிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதையும் எடுத்துக் கூறினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் செயல் பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×