search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
    X

    மேலாண்மை குழு உறுப்பினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.  

    உடுமலை அரசு பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

    • தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம்கல்வித்துறை சார்பாக உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாணவர்கள் - பெற்றோர்கள் மூலமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சமூக சேவகர் ஜெ.ஷாஜாதிபர்வீன், உடுமலை நகர மன்ற 12 வது வார்டு உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்டது . இதையடுத்து திருப்பூர் மாவட்ட கல்வி துறை அதிகாரி கு.பழனிச்சாமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×