search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு குழு கூட்டம்"

    • மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மூன்றாம் காலாண்டு மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்குழு கூட்டத்தில் தேசிய உணவுப் பாதுகா ப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தா லோசிக்கப்பட்டது.

    பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ராகி வழங்குவது குறித்து தெரிவிக்கும் போது ராகி கொள்முதல் செய்யும் பணிகள் மூன்று கொள்முதல் நிலையங்கள் (பென்னாகரம், தருமபுரி மற்றும் அரூர்) மூலம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி குடும்ப அட்டைதரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரத்த சோகையை கட்டுபடுத்தும் என்பதால், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    விரைவில் தருமபுரி மாவட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    இக்குழுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.யசோதா, தருமபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் கே.எம்.அண்ணாமலை மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது
    • மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

    பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்த ப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொட ர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசின் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்த ப்பட்டு வருகிறது என்ப தனை கண்காணித்து அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதே னும் குறைபாடுகள் இரு ப்பின் அரசு அலுவலர்கள் எனது கவனத்திற்கு உடனடி யாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நட வடிக்கைள் மேற்கொள்ள ப்படும். அதனைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    ×