search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்குழு"

    • கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
    • ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, வைத்திலிங்கம், முருகவேல், வேங்கை சேகர், சக்திவேல், மாவட்டபொருளாளர் சத்திய ஜானகி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வன்னியர்க ளுக்கான உள் ஒதுக்கீட்டினை வரும் கல்வியாண்டிலே பெற பா.ம.க. வன்னியர் சங்கத்தினர் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கிராமம், நகரம் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகள், பொது நல, தன்னார்வ, தொண்டு அமைப்புகளைச் சார்ந்த வன்னியர்கள், வன்னியர் அல்லாதவர்கள் இட ஒதுக்கீட்டின் பயன் அறிந்த பட்டியலினத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமும் ஆதரவு கோரி தமிழக முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் வலியுறுத்தும் கடிதத்தை அனுப்ப வலியுறுத்த வேண்டும் எனவும், கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்புவது எனவும், வணிக நிறுவனங்களின் பெயர்களை துாய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும் எனவும், பா.ம.க.வின் இட ஒதுக்கீட்டின் கொள்கையால் வன்னியர் சமுதாயம் கல்வி, பொருளா தாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றால் அடையும் பயன்குறித்து, ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எழிலரசன் நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் மாவட்ட கிளை செ யற்குழு கூட்டம் சேர்மன் சுந்தரம் தலைமையில் நடந்தது. புரவலர்கள் ராமநாதன், உலகராஜ், துணை சேர்மன் ஜெயக்குமார், ராமேசுவரம் கிளை சேர்மன் பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷாலினி பில்லி கிரஹாம், செய்யது முகமது ஹசன், கோபால், ரினி, பவதாரணி, கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், மாவட்ட கன்வீனர்கள் அலெக்ஸ், பாலமுருகன், முதலுதவி பயிற்சிகள்-பேரிடர் கால பயிற்சிகள் குறித்து சொக்கநாதன், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து கலெக்டரிடம் ஒப்படைத்தல் குறித்து பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் பேசினார்.

    வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் குணசேகரன் சமர்ப்பித்தார். புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து பேசப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதலுதவி, பேரிடர் காலங்களில் ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்ட ஆலோசகர் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், புரவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர். திரவிய சிங்கம், தமிழரசன், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    • மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்செந்தூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் திருச்செந்தூரில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளரக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ்குட்டி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அரசின் செலவில் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணி கண்டராசா, திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செஞ்சுடர், ஆட்டோ கண்ணன், திருவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், ஆழ்வை ஒன்றிய பொருளாளர் செல்வக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக நல்லி ணக்கப்பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து நன்றி கூறினார்.

    ×