search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut"

    • பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.
    • தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் கூறினார்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை ஒரு முக்கிய பயிராக ஏறத்தாழ 7500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு முக்கி யமான வாழ்வாதாரமாக தென்னை விவசாயம் இருந்து வருகிறது.

    சமீப காலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு கொண்டி ருக்கிறார்கள்.

    சென்னை வேளாண்மை உற்பத்தி ஆணையர், செயலர் மற்றும் வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் வேப்பங்குளம் கூட்டாக ஒன்று சேர்ந்து தீவிர வயல் ஆய்வு மருங்கப்பள்ளம், நாடியம் மற்றும் இரண்டாம்புளிக்காடு ஆகிய கிராமங்களில் மேற்கொண்டனர்.

    வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் விஞ்ஞானி டாக்டர் அருண்குமார், தென்னையை தாக்கும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை கருத்தலை புழுக்களை பற்றியும், தஞ்சாவூர் வாடல் நோய் (அடித்தண்டழுகல் நோய்), கேரளா மாடல் நோய், குறுத்தழுகல் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் இடி மின்னலினால் பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.

    மேலும் தென்னை நடவு முறை, சொட்டு நீர் பாசனம், ஊடுபயிர்கள், தென்னையில் கலப்பு பண்ணை அமைத்தல், தென்னை மட்டைகள், ஓலைகள், தென்னை நார்க்கழிவு புதைத்தல், தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, நுண்ணூட்டச் சத்துகளின் முக்கியத்துவம், தென்னை டானிக், தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள், தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் விரிவாக எடுத்து கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு), துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் செய்திருந்தனர்.

    • அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
    • தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது வழங்கப்படும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போ ராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதற்காக நேற்று அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கோவிலூர் செயல் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், போராட்டக்குழு சார்பில் அமைப்பின் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட தலைவர் துரையரசன், நாகை மாவட்ட தலைவர் விவேக் திரயகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் குன்னலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் நெல் விவசாயிக்கு வழங்கப்பட்ட தற்காலிக ரசீதை அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம், தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது தேங்காய்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு வழங்கப்படும், ஆர்.டி.ஆர். பதிவிற்கு விண்ணப்பம் தெரிவிக்கப்படுகிறது என உறுதியளிக்கப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.

    • தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    • நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.
    • தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் தென்னை யில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் கமல சுந்தரி தென்னையில் இளநீர் பாயாசம் ,தேங்காய் இட்லி பொடி, தேங்காய் எண்ணெய் ,தேங்காய் பர்பி ,தேங்காய் சீப்ஸ் தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் பால் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை செய்து செயல் விளக்கம் விளக்கம் அளித்தார்.வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு தெ ன்னையில் ஒருங்கிணைந்த உர மேம்பாடு, நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    அருண்குமார் இணைப் பேராசிரியர் (தோட்ட க்கலை) தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை பற்றி கூறினார்.

    இதில் மதுக்கூர் சுற்று வட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கருத்து க்களை கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பாசன மேலாண்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தார். முடிவில் உதவி பேராசிரியர் சுகன்யா தேவி நன்றி கூறினார்.

    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா என ஆய்வு.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்ட செயல்விளக்கங்களைகள ஆய்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவி இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஏரி வேலூர் கிராமத்தில் பருத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம் திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திட்டம் பற்றி விளக்கி ஆலோசனை வழங்கினர்.

    அரித்துவாரமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    மேலும் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் ஆலங்குடி, நார்தாங்குடி, ஆகிய பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின் போது வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூர்யமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, சப்தகிரிவசன் உடன் இருந்தனர்.

    நேற்று 124 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 850கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 124 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 850கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.59.15-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து 804-க்கு ஏலம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
    • இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் விற்பனனக்குழு செயலாளர் சரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு அரவை கொப்பரை தேங்காய்யானது 6200 மெ டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கிலோ ஒன்றிற்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் கொள்முதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.

    இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    நிகழ்விற்கு அண்ணா துரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மார்டின் எட்வர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை ேதங்காய் விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் கொப்பரை ேதங்காய்யின் ஈரப்பதம் 6 சதவீதற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் 10 சதவீதத்திற்குள்ளும், சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் குறைந்தபட்ச சராசரி தரத்துடன் இருக்குமாறும் உறுதி செய்து சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் மேற்கூறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொப்பரை க்குரிய கிரயத் தொகையானது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இைணயம் மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • இதில் 7 ஆயிரத்து 857‌ கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்
    • தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கி–ணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்கு–நர் மா.பெரி–யசாமி கூறியிருப்ப–தாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,505 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை–யில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரண–மாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படு–கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.

    தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் டிராக்டரில் இயங்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இயற்கை–யிலேயே காணப்படும் என் கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்ட–றிந்து, கூட்டுப்புழுக்கள் காணப்படும் ஓலை துணுக் குகளை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பர–வலாக ஓலை–யில் பொருத்த வேண்டும்.

    கிரைசோபெர்லா இரை விழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளி–யிடவேண்டும். கிரைசோ–பெர்லா இரை விழுங்கிகள், குடுமியான்மலை உயிரி–யல் கட்டுப்பாட்டு காரணி–கள் உற்பத்தி மையத்தி–லிருந்து தற்போது வழங் கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள் ளப்படுகிறது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பு–றத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும்.

    இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடி–யாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை–களை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    ×