search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு கருத்தரங்கம்
    X

    விவசாயிகள் கருத்தரங்கம் நடந்தது.

    விவசாயிகளுக்கு கருத்தரங்கம்

    • நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.
    • தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் தென்னை யில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் கமல சுந்தரி தென்னையில் இளநீர் பாயாசம் ,தேங்காய் இட்லி பொடி, தேங்காய் எண்ணெய் ,தேங்காய் பர்பி ,தேங்காய் சீப்ஸ் தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் பால் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை செய்து செயல் விளக்கம் விளக்கம் அளித்தார்.வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு தெ ன்னையில் ஒருங்கிணைந்த உர மேம்பாடு, நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    அருண்குமார் இணைப் பேராசிரியர் (தோட்ட க்கலை) தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை பற்றி கூறினார்.

    இதில் மதுக்கூர் சுற்று வட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கருத்து க்களை கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பாசன மேலாண்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தார். முடிவில் உதவி பேராசிரியர் சுகன்யா தேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×