search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனை"

    • கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
    • இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் விற்பனனக்குழு செயலாளர் சரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு அரவை கொப்பரை தேங்காய்யானது 6200 மெ டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கிலோ ஒன்றிற்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் கொள்முதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.

    இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    நிகழ்விற்கு அண்ணா துரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மார்டின் எட்வர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை ேதங்காய் விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் கொப்பரை ேதங்காய்யின் ஈரப்பதம் 6 சதவீதற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் 10 சதவீதத்திற்குள்ளும், சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் குறைந்தபட்ச சராசரி தரத்துடன் இருக்குமாறும் உறுதி செய்து சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் மேற்கூறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொப்பரை க்குரிய கிரயத் தொகையானது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இைணயம் மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×