search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி- புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
    X

    தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி- புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

    • தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்
    • தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கி–ணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்கு–நர் மா.பெரி–யசாமி கூறியிருப்ப–தாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,505 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை–யில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரண–மாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படு–கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.

    தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் டிராக்டரில் இயங்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இயற்கை–யிலேயே காணப்படும் என் கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்ட–றிந்து, கூட்டுப்புழுக்கள் காணப்படும் ஓலை துணுக் குகளை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பர–வலாக ஓலை–யில் பொருத்த வேண்டும்.

    கிரைசோபெர்லா இரை விழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளி–யிடவேண்டும். கிரைசோ–பெர்லா இரை விழுங்கிகள், குடுமியான்மலை உயிரி–யல் கட்டுப்பாட்டு காரணி–கள் உற்பத்தி மையத்தி–லிருந்து தற்போது வழங் கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள் ளப்படுகிறது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பு–றத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும்.

    இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடி–யாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை–களை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×