என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cm kumaraswamy"
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு ‘‘காவிரி நதிநீர் ஆணையம்’’ உருவாக்கியுள்ளது.
காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வரும் கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, அந்த ஆணையத்துக்கும் உறுப்பினர்களை நியமிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் அவருக்காக காத்திராத மத்திய அரசு காவிரி ஆணையத்தை செயல்பட வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி நேற்று தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை சந்தித்துப் பேசினார்.
அமைச்சர்களின் செயல்பாடு, இடைக்கால பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தேவேகவுடாவிடம் குமாரசாமி ஆலோசனை பெற்றார். அப்போது குமாரசாமிக்கு தேவேகவுடா சில அறிவுரைகளை வழங்கினார்.
‘‘காவிரி நீர் ஆணையம் தொடர்பாக மத்திய அரசுடனோ அல்லது தமிழக அரசுடனோ மோதல் போக்கை கடை பிடிக்காதே. அது தோல்வியில் முடிந்து விடும். எனவே தமிழக அரசுடன் சற்றுவிட்டுக் கொடுத்து நடந்து கொள்’’ என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.
காவிரி ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லாதே. அதற்கு பதில் மத்திய அரசுடன் சமரசமாக செல்வதே நல்லது என்றும் குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளாராம்.
இதைத் தொடர்ந்தே முதல்-மந்திரி குமாரசாமி நீர்ப்பாசன நிபுணர் வெங்கட்ராமை அழைத்து விரிவான அறிக்கை தயாரித்து தரும்படி உத்தரவிட்டாராம். அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு குமாரசாமி மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுத முடிவு செய்துள்ளார். #DeveGowda #CMKumaraswamy #Cauveryissue
கர்நாடக மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு மந்திரி கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் நாளில் கவர்னர் வி.ஆர். வாலா உரையாற்றுகிறார். முதல்-மந்திரியும், நிதித்துறையை கூடுதலாக கவனிப்பவருமான குமாரசாமி ஜூலை 5-ந் தேதி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaBudget #Kumaraswamy
கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து ஒரு வாரம் ஆகியும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை.
முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது மற்றும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு என காங்கிரஸ் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. இதில் முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை, தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று குமாரசாமி பிடிவாதமாக மறுத்து விட்டார்.
என்றாலும் இழுபறி நீடித்தது. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் இதில் பணிந்து விட்டது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து புதிய சமரச திட்டத்தை தெரிவித்தனர். அதன்படி மாநிலத்தில் குமாரசாமி முதல்-மந்திரியாக நீடித்தால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஜே.டி.எஸ். கட்சி போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தது.
முதலில் தயங்கிய குமாரசாமி பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சமரசம் ஆனார். முதல்-மந்திரி பதவியில் 5 ஆண்டு நீடிப்பது தொடர்பான உறுதிமொழி ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று குமாரசாமி கேட்டார். அதற்கும் காங்கிரஸ் சம்மதித்தது. இது மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவரும் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூர் வந்து மாநில தலைவர்களை சந்தித்து பேசி சமாதானப்படுத்தினார். 5 சுற்று பேச்சுவார்த்தைக்குப்பின் சமாதானம் அடைந்தனர்.
அதன்பிறகு குமாரசாமியையும் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினார். காங்கிரசின் உத்தரவாதத்தை நேரில் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி உடன்பாடு பற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. #KumaraSwamy #Karnataka #congress
பெங்களூர்:
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுத்த ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் ஜே.டி.எஸ். இடையே இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காங்கிரசார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நாளை சந்தித்துப் பேசுகிறார்கள்.
இதற்கிடையே முதல்- மந்திரி குமாரசாமியும் நாளை டெல்லி செல்கிறார். காலை 11.30 மணிக்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பிரதமர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பிரதமர் மோடியை குமாரசாமி சந்திப்பது தொடர்பான தகவலை பெங்களூரில் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.
பிரதமருடனான சந்திப்பின் போது கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்துகிறார்.
தொடர்ந்து மத்திய எரி சக்தி துறை மந்திரி பியூஸ் கோயலை குமாரசாமி சந்திக்கிறார். கர்நாடகத்தில் தற்போது கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க தேவையான ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுலைசந்திக்கும் நிலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றதுமே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMKumaraswamy #PMModi
நாளை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமி தனது தொண்டர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
எனது கட்சி தொண்டர்கள் எப்போதுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே எனது வேண்டுகோளை ஏற்று யாரும் கட்அவுட், பேனர் வைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#JDS #kumaraswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்