search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians"

    • வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துகிறது.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ளவர்கள் குரங்கை விரட்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றித்திரியும் குரங்களை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதரை திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில் உள்ள உள்ள மதுரை மாநக ராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் சாக்கடை நீர் ,கழிவு நீர், மழை நீர் நீண்ட நாட்களாக தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
    • இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ,இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேற்கு தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் சாக்கடை நீர், கழிவுநீர், மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் இதனை கடந்து செல்ல முடியாமலும் சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவுவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும், இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர். அந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபால கிருஷ்ணன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தினை அகற்றவேண்டும். புதிய சாலை அமைக்கவேண்டும் என கூறினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் பூஞ்சோலை குப்பம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர் ஆனால் பொதுமக்கள் அளித்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பள்ளி தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற ங்களிலும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்கள் செல்வதற்கு பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது.

    • மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    20-வது வார்டு தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டதால் மோசமாக காணப்படும் தெரு. 


    மதுரை

    மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாத புரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.

    இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    சாலை மறியல்

    இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோ ரியும், தெருக்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் இன்று காலை கவுன்சிலர் நாக ஜோதிசித்தன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் பிரச்சினை, புதியசாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • வேளாண் அதிகாரிகள் புறக்கணிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும்
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மோகன்தாஸ்:-

    கிடாரங்கொண்டான்- தலையுடையவர் கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும்.

    நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பாதிப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    ராஜ்கண்ணன்:-

    ஆக்கூரில் பிடாரி குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.

    சக்கரபாணி:-

    கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    ரஜினி:-

    1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி- மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    லெனின் தாஸ்:-

    காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தரவேண்டும்.

    ஜெயந்தி:-

    தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

    ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்துக்கும் முன்கூட்டியே அழைப்புகள் விடுக்கப்படுகிறது.

    அவர்கள் இதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதை கண்டித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பப்படும்.

    உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது.
    • மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்,

    கடலூர்:

    கடலூர்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வேண்டி ஏப்ரல் 15 -ந்தேதி முதல் ஜூன் 14 -ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று அகாலை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர. இதற்கிடையே நேற்று நள்ளிரவு வந்த மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு திரண்டு வந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில்

    மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளிலும், வர்ணம் பூசும் பணிகளிலும், தங்களிடம் உள்ள மீன் பிடிக்கும் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர் .   இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்க செல்லாமல் இருக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2023 -ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் , தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருக்க வேண்டும். இத்தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்கள், கிராமங்கள் பொறுப்பேற்க நேரிடும். அவ்வாறு தவறும் படகுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரை ஓரமாக பெரும்பாலான படகுகள் ஓய்வெடுப்பதை காண முடிந்தது.

    • கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    நாளை (புதன்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.
    • பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சா வடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.

    இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    சிறப்பு முகாமினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் விநாயகம், துணை தாசில்தார்கள் விவேகானந்தன், பிரியா ஆகியோர் பார்வை யிட்டனர்.

    இப்பணியில் மேற்பார்வை யாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலு வலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டு வருகின்ற 8-ம் தேதி முதல் 12 -ம் தேதி வரை திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது திருவிழா நடைபெறுவதை யொட்டி அங்கு தற்காலிகடை அமைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ெபாதுமக்களிடம் தி.மு.க.வினர் சிலர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அறிந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தற்காலிக கடை அமைக்க பணம் கேட்ட திமுக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினை நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆண்டாண்டு காலமாக திருவிழாவின் போது தற்காலிக கடை அமைக்க பணம் ஏதும் கொடுக்காமல் தொழில் செய்து வந்தோம். தற்போது திமுகவிவை சேர்ந்த சிலர் தற்காலிக கடை அமைப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மிரட்டி வருகின்றனர். இல்லை என்றால் கடை நடத்த முடியாது என மிரட்டுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செம்மினிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • கிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாககிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ., வரை மனுக்கள் கொடுக்கப்பட்டு விசா ரணை நடந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அட்டைப்பெட்டி கம்பெனி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், நிலத்தடி நீர் பாதிக்காது என்பதாலும் தொடங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அட்டைப்பெட்டி கம்பெனியினர் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினர். இது குறித்து வாடிப்பட்டி போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவு தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும், மீண்டும் அட்டைப்பெட்டி கம்பெனி பணியை தொடங்குவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு செம்மி னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டல துணை தாசில்தார் தமிழ்எழிலன், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ.வுக்கு மேல் முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    ×