search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
    X

    சிறப்பு முகாம் நடந்தது.

    வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்

    • விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.
    • பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சா வடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.

    இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    சிறப்பு முகாமினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் விநாயகம், துணை தாசில்தார்கள் விவேகானந்தன், பிரியா ஆகியோர் பார்வை யிட்டனர்.

    இப்பணியில் மேற்பார்வை யாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலு வலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×