என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகராட்சி குப்பை கிடங்கில் தீ பொதுமக்கள் போராட்டம்
- கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
- குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்