search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
    • இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.

    அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.

    அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    • சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.
    • தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இடி மின்னலுடன் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டியது.

    நள்ளிரவு அதிகரித்த மழை அதிகாலை வரை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அரபு நாடுகளில் இருந்து அதிகாலையில் தான் சென்னைக்கு விமானங்கள் வருவது வழக்கம்.

    அதுபோல இன்று அதிகாலை வந்த விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியவில்லை. ஜார்ஜாவில் இருந்து 168 பயணிகளுடன் சென்னைக்கு அதிகாலை 3.40 மணிக்கு வந்த விமானத்தை தரை இறக்க முடியவில்லை. துபாயில் இருந்து 238 பயணிகளுடன் 3.50 மணிக்கு வந்த விமானமும் தரை இறக்க முடியாமல் வட்டமிட்டன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகளுக்கு இங்கு தரை இறக்க வேண்டாம் பெங்களூருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 2 விமானங்கள் பெங்களூருக்கு சென்றன.

    இதே போல இரவு 11.45 மணிக்கு துருக்கியில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.

    தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்களை இயக்கக் கூடிய அளவுக்கு இயல்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

    • விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர்.

    வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

    விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை 'ஸ்கேனிங்' மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பல கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது
    • சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

    சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் செனனை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 8 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

    ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், பெங்களூருவில் இருந்து சென்னை வந்தது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டன. தற்போது விமான சேவை சீராகியுள்ளது.

    • ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
    • புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. கொழும்பு, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.

    இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 36 பன்னாட்டு விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இயங்கப்பட்டது.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைனஸ் உள்பட பெரிய ரக விமானங்கள் புதிய முனையத்தில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய பன்னாட்டு வருகை முனையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்றும், 2-ம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
    • விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன்(55). தொழில் அதிபர். இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு, ஐதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது காஜா மொய்தீனின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மோசடி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து தனி அறையில் வைத்தனர். இதுபற்றி தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
    • டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தொடங்கியது.அதன் பின்னர் மே மாதம் 3-ந் தேதி, 3 விமானங்கள் சோதனை அடிப்படையில், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மேலும் சில விமானங்கள் புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது.

    ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டபோது, சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டதால் அதனை சரி செய்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து, முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

    கடந்த 13-ந் தேதியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்தபடியாக வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவைகளும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல்-2 ல் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு புதிய விமான நிலையத்தில் இருந்து விமான சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது. சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் முழுஅளவில் இயங்கத் தொடங்கிஉள்ளன.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் அடுத்த சில நாட்களில் அல்லது ஜூலை முதல் வாரத்தில், புதிய முனையத்தில் இருந்து இயங்கும் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது செயல்பாட்டில் இருக்கும், டெர்மினல்-3 என்ற (டி 3)பழைய சர்வதேச முணையம், முழுமையாக மூடப்படும். மேலும் டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. இதன்பின்னர் புதியமுனையத்தில் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
    • விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 2 விமானங்களும், கடப்பா செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும், கடப்பாவில் இருந்து வரவேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய முனையத்தில் சோதனை முறையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அழகுப்படுத்தும் பணி சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கி ணைந்த விமான முனையம் உலகத்தரத்தில் நவீன முறையில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய முனையத்தில் சோதனை முறையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் கூடுதலாக இடங்கள் உள்ளன. இதனை மேலும் அழகுப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி புதிய விமான முனையத்தின் முன் பகுதியில் பசுமையான செடிகள், நடைபாதைகள் அமைக்கும் பணி, செல்பி மையம், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தற்பொழுது இயங்கி வரும் பழைய உள்நாட்டு முனையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் மூலமாக அந்த சேவைகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில மாதங்களில் பழைய சர்வதேச விமான முனையம் முற்றிலுமாக இடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அழகுப்படுத்தும் பணி சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முன்பகுதியை மேலும் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. விமான பயணிகள் மற்றும் பார்வை யாளர்களுக்கு உணவுக் கூடம், பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் காத்திருப்பதற்கு இருக்கைகள், பார்வையா ளர்களை கவரும் வகையில் கலைப் பொருட்கள், வண்ண மயமான விளக்குகள், வண்ண விளக்குகளுடன் நடைபாதைகள், விமான நிலைய தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையப்படும் என்றார்.

    • விமான நிலையத்தில், மேலும் சில பணிகள் செய்யப்பட்டன.
    • பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 2.30 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த புதிய முனையம் மூலம் 3 கோடி பயணிகள், பயணம் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில், மேலும் சில பணிகள் செய்யப்பட்டன.

    அதன் பின்பு மே மாதம் 3-ந்தேதியில் இருந்து, சோதனை முறையில் சில விமானங்கள், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737 - 738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. அதைத்தொடர்ந்து, நடுத்தர விமானங்களும் குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன.

    ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தபடி, சோதனை விமான ஓட்டங்கள், கடந்த மே மாதம் இறுதிக்குள் நிறைவடையவில்லை. சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதோடு வேறு சிறு பிரச்சனைகளும், ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே தற்போது அந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் வருகிற 12 -ந்தேதி முதல், 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு முதல்கட்டமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா, டாக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று வரும் சர்வதேச விமானங்கள், இந்த புதிய முனைத்தில் இருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இதேபோன்று ஜூன் மாதம் முழுவதும் இதே நிலைப்பாடு நீடிக்க இருக்கிறது. அதன் பின்பு வருகிற ஜூலை மாதத்தில் இருந்து சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், முழு அளவில் செயல்பட இருக்கிறது. இந்த முனையங்களில் சிறிய, நடுத்தர ரக மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து இயங்கத் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் சென்னை ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் முழு அளவில் செயல்படுவது, ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. சோதனை ஓட்டம் முழுமையாக முடிவடையாததால், இந்த ஒரு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
    சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை விமானநிலையம் வந்து அவா்கள் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனா்.

    அதைப்போல் போட்டிகள் முடிந்து, தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்கின்றனா். அதைப்போல் போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    அதனால் சென்னை விமானநிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா், குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமானநிலையம் உள்நாடு, சா்வதேச முணையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற, உரிய வசதிகள் செய்துத்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    அதற்காக குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதி காரிகள், விமானநிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள், உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட கூட்டத்தில், பல்வேறு அதிகாரிகள் பல விதமான ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டா்கள் அமைப்பது என்று ஆலோசனை நடந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, விமான நிலையத்திற்கு வரும் பயணியர், சிக்கல்கள் எதிர்கொள்வதை தவிர்க்கவும், விரைவாக வெளி யேறவும் உரிய நட வடிக்கைகள் எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்.. சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    சென்னை:

    பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

    அப்போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத்  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்றும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.

    தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
    ×