என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்28 May 2022 6:24 PM GMT (Updated: 28 May 2022 6:24 PM GMT)
கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை:
பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
அப்போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்றும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.
தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X