search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னை பதிவு எண் கொண்ட காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த தீரன் சின்னமலை தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து ஊத்தங்கரை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த படதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி மகன் தீபன் என்பவர் மீது கார் மோதியது.

    இதில் தீபன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த காரில் 30 குட்கா மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.

    விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்தனர்
    • காயத்துடன் உயிர்பிழைத்த ஒருவர் மருத்துவமனையில அனுமதி

    மத்திய பிரதேச மாநிலம் சகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து சகர்-ஜபால்புர் சாலையில் பமோரி தூதார் அருகில் நடைபெற்றது. சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஏழு பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை, பக்தர்களை ஏற்றிக் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கன்வாரி பக்தர் ஒருவர் உயிரிழந்தார் 15 பேர் காயம் அடைந்தனர்.

    • திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    களக்காடு:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி சேர்மன் தெருவை சேர்ந்தவர் ஆசிக் அலி. இவரது மகன் சேக் அப்துல்லா(வயது 25).

    இவர் வார விடுமுறையை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அமீர் அப்பாஸ்(25) உள்பட 5 பேருடன் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    சுற்றுலாவை முடித்து விட்டு செல்லும் வழியில் அவர்கள் குற்றாலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    குமரி-நெல்லை 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஷேக் அப்துல்லா ஓட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கு சாலையோரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த 14 டயர் கனரக டிரெய்லர் லாரியின் பின்னால் ஷேக் அப்துல்லா ஒட்டி வந்த கார் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அதே காரில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அகமதுபாஷா, ஆசிம்கான் மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து அங்கு இரவு நேர ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் நாங்குநேரி போலீசாரும் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பக்க இருக்கையில் இறந்த நிலையில் இருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    காயம் அடைந்த 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரெய்லர் லாரி டிரைவரான மதுரை ஒத்தக்கடை அய்யப்ப நகரை சேர்ந்த லெட்சுமணன்(59) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லெட்சுமணன் குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மின்கம்பங்கள் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்.

    அப்போது கிருஷ்ணன்புதூர் அருகே லாரியின் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் அவர் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டயரை கழற்றி உள்ளார். அப்போது தான் லாரியின் பின்புறத்தில் கார் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது.
    • விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    மதுரை கடைச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ஸ்ரீராம் (வயது 32), துரைமுருகன் (31) மற்றும் கார்த்திக்குமார் (28) ஆகிய 3 பேரும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிப்பதற்காக நேற்று காரில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலையில் ஊருக்கு காரில் மீண்டும் புறப்பட்டனர்.

    அவர்கள் சென்ற கார் தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்க்குடி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஸ்ரீராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
    • பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், முத்து. முத்துவின் உறவினர் அந்தமானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர டிரைவர் முத்துவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சித்தர் கோவில் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

    • 385 கிலோ பறிமுதல்
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலையுடன் வந்த கார் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. அதில் காய மின்றி தப்பிய டிரைவர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகு திக்குஉட்பட்டபனம்தோப்பு என்ற இடத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந் தது. இதில் கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பிக் காருக் குள் இருந்து வெளியேறினார்கள். பின்னர் காரில் இருந்து சித றிய புகையிலை பொருளை (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) அவர் சேகரித்து கொண்டிருந் தார். அப்போது நாட்டறம் பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    விபத்தில் சிக்கிய கார் தமிழக பதிவெண் கொண்டதாகும். காரில் தடை செய்யப் பட்ட 385 கிலோ புகையிலை பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட் சம் இருக்கும் என கூறப்படு கிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்தும், புகையிலை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர். சத்தியமூர்த்தி (28) கடந்த ஆண்டு ஆற்காடு - செய்யாறு சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.

    விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    • வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.

    2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    இந்நிலையில் மீரட்டில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனவைி பரிமளா (வயது 40), இவர்களது மகன் அருண்ராஜ் (19).

    பழனிவேல் குடும்பத்துடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. வேகமாக லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த பழனிவேல் மகன் அருண்ராஜ் மற்றும் அருண்ராஜின் தாய் பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார் லாரியில் லாவகமாக சிக்கிக்கொண்டது. இதனால் போலீசாரால் விக்கியை காரியிலிருந்து மீட்க முடியவில்லை.

    உடனடியாக புவனகிரி போலீசார் சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் அருண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் திருமகன். டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் இன்று வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் திருமகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் வேகமாக மோதியது. இதில் திருமகன் தூக்கி வீசப்பட்டு அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    இதனால் சம்பவ இடத்திலேயே திருமகன் துடிதுடித்து பலியானார். திருமணமான அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது. இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது 18 வயது கல்லூரி மாணவரான ஸ்ரீசிஜிவ் விக்ரம் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய அவரும் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்திருப்பதும், இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வாலிபர் விக்ரம் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
    • மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.

    இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×