search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி
    X

    மத்திய பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

    • சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்தனர்
    • காயத்துடன் உயிர்பிழைத்த ஒருவர் மருத்துவமனையில அனுமதி

    மத்திய பிரதேச மாநிலம் சகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து சகர்-ஜபால்புர் சாலையில் பமோரி தூதார் அருகில் நடைபெற்றது. சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஏழு பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை, பக்தர்களை ஏற்றிக் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கன்வாரி பக்தர் ஒருவர் உயிரிழந்தார் 15 பேர் காயம் அடைந்தனர்.

    Next Story
    ×